பக்கம்:விஷக்கோப்பை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

45


சி. பி. சிற்றரசு - 45. மாற்றம் விரும்பினால், அதை உனக்கு ஏற்கனவே அளித்திருக்கும் பரிபூரண சுய உரிமைப்படி நீ கேட்டுக் கொள்ளலாம், இது நீதிமன்றத்தார் அறிவிப்பு. இறுதி எச்சரிக்கை நீதிமான்களே! நீங்கள் எனக்களித்த விடுதலைக் காக நான் நன்றி செலுத்துகின்றேன். எனக்கு இந்தத் தீர்ப்பையளிக்க நீங்கள் அதிக நேரத்தை வீணக்க வில்லை. ஆனல் எனக்கு மரண தண்டனையளித்ததின் மூலம் நகரத்தின் நன்மையில் நாட்டங் கொண்டுள்ள பலருடைய பழிச் சொல்லுக்கு ஆளாய்விட்டீர்கள். நான் அறிஞளுயிருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னை அவர்கள் என் இறப்புக்குப்பின் அறிஞன் என்று ஒப்புக்கொள்வது திண்ணம். மெலிடஸ் எனக்கு விதிக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொண்ட மரண தண்டனையை நீங்களும் மனமார தர உங்கள் தாராள சிந்தையோடு ஒப்புக் கொண்டீர்கள். அதற்குப் பதிலாக நான் உங்களிடம் எதை வேண்டுவது ? ஆனால், என் தண் டனேயில் சிறிது மாற்றத்தை யுண்டாக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்ள எனக்குச் சட்டப்படி உரிமை யுண்டு என்பதை எடுத்துக் காட்டி என் வேண்டு கோளை எதிர்பார்க்கிறீர்கள். இது ஒவ்வொரு குற்ற விசாரணையின் முடிவிலும் நீதிமன்றம் கையாள வேண்டிய சம்பிரதாயந்தான் என்பதும், ஆனால் குற்ற வாளியின் வேண்டுகோள் ஒவ்வொன்றையும் செவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/50&oldid=1331433" இலிருந்து மீள்விக்கப்பட்டது