பக்கம்:விஷக்கோப்பை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

65


சி. பி. சிற்றரசு 65 என் குழந்தைகள் பெரியவர்களான பிறகு அவர்களை நல்வழிப்படுத்துவதோ, தீய வழிச் செலுத் துவதோ உங்களுடைய பொறுப்பு. நேரம் நெருங்கி விட்டது. நான் சாகப் பிறந் திருக்கின்றேன். நீங்கள் வாழப் பிறந்திருக்கின்றீர் கள். இறப்பா, பிறப்பா, எது நல்லது என்பதை ஆண்டவனே சொல்லட்டும் என்று மரணத்தின் கோரப் பற்களுக்கிடையே சிக்கியிருக்கும் நான் சொல்லி என் வி ன் ண ப் பத் ைத முடித்துக் கொள்ளுகின்றேன்.” தண்டனையில் தாமதம் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டிய விதம் விஷங்கொடுத்துக் கொல்ல வேண்டும் என் றும், அதுவும் இப்போது நகரத்தில் விழாவொன்று நடந்து கொண்டிருப்பதால் அதை முன்னிட்டு டிலோசுக்குச் சென்ற கப்பல் திரும்பி வந்ததும், அதாவது இன்றைக்குச் சரியாக 30-ஆவது நாள் விழா முடிந்து கப்பல் வந்து சேர்ந்ததும் அதற்கடுத்த நாள் மாலை 6-மணிக்குச் சாக்ரடீசுக்கு விஷங் கொடுத்துவிட வேண்டுமென்றும் அதுவரையில் குற்றவாளி தப்பித் தோடாமல் தற்காப்புக்காகக் காலில் விலங்கிட்டுச் சிறையில் காவலில் வைக்க வேண்டுமென்றும் நீதி மன்றம் தனது முடிவான தீர்ப்பை அறிவித்து விட்டது. அழுதவர்கள் அனேகர். ஆனந்தப்பட்ட வர்களின் தொகையும் அந்த அளவிருக்கும். பொது வாக மறுமலர்ச்சி காண விரும்பியவர்கள் புலம்பியே தீர்த்தனர். வி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/70&oldid=1331453" இலிருந்து மீள்விக்கப்பட்டது