பக்கம்:வீடும் விளக்கும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வீடும் விளக்கும் தாக முகம் அறிவிக்கின்றதே. காரணமென்ன? என்று கேட்டாள். அதற்கப்பெண், விளக்கமின்றிப் பண மிருந்து என்ன செய்வது? பேரை விளக்க ஒன்று மில்லையே. பின்னால் விளக்கெரியாது போய்விடும் போலுள்ளதே. இதுதான் பெருங்கவலை. இதற்காகத் தான் இராமேசுவரம் செல்கிறோம். செய்யாத அறமே (தருமமே யில்லை. எல்லாம் தலைவிதிப்படிதானே நடக்கும்' என்று சோர்ந்து புலம்பலானாள். பின்பு கிழவி, நன்றாகச் சொல்லம்மா, குழந்தை குட்டி ஒன்றுமில்லையே என்பது தானே தங்கள் பெருங் கவலை? எல்லாம் கடவுள் கொடுப்பார்; வருத்தப்பட வேண்டா' என்று ஆறுதல் கூறினாள். அவளும் அவ்வாறுதலைக் கேட்டுத் தேறுதல் கொண்டாள். இப்பல்வகைக் கூத்துக்களோடு புகை வண்டியும் விரைந்து சென்றது. உலகினர் பாராட்டு: இக்கதையால், பெண்கள் தம்மை விளக்கும் விளக் காகப் பிள்ளைகளையே கருதுகின்றார்கள் என நன்குணரலாம். இப்போதும் உலக வழக்கில், பணக் காரியாய் இருப்பினும் பிள்ளையில்லாதவளை நோக்கி ஏதாவது குழந்தை குட்டி உண்டா என்று கேட்டால், இறுமாப்பொடுங்கிச் சோர்ந்துவிடுகின்றாள். ஏழையா யிருப்பினும் பிள்ளையுள்ளவளை நோக்கி அங்ங்ணம், கேட்டால், 'எனக்கென்ன குறைவு; கடவுள் என்னைச் சரியாய்த்தான் வைத்திருக்கின்றார்' என்று இறுமாப் புடன் பதில் விடுக்கின்றாள். ஒரு பெண்ணைப் பெரிய