பக்கம்:வீடும் வெளியும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧盟 வீடும் வெளியும் அவருடைய எண் ண ம் உயர்வானது என்று சொக்கையா பாராட்டாமல் இருப்பாரா? மறுவாரம் சிறப்புக் கூட்டம் ஏற்பாடாகி யிருந்தது. அதற்கு பெரிய தலைவர் ஒருவர் வருவார். அவர் முன்னிலையில் பையன் புதிய பாதையைத் தேர்ந்துகொள்வது அறிவிக் கப்படும் என்றும் கவி தெரிந்து கொண்டார், நல்லது’ என்று சொன்னர், வேறு என்ன சொல்வது? முதலாளி தாராளமாக உதவிய ஐந்து ரூபாயை வாங்கிக்கொண்டு, சொக்குக் கவிராயர் தெருவுக்கு அந்தார்.

  • உப்புச் சொத்து அவங்க வீட்டு அப்பன் சொத்தா? அதுக்கு ஏண்டா வரி சொல்லு குப்பா!' என்று முனகியவாறே நடந்தார்.
  • அண்ணுச்சி, அண்ணுச்சி யோவ்' என்று கூப்பிடும் குரல் அவரை நிறுத்தி, திரும்பிப் பார்க்க வைத்தது. ஒ, தொண்டர் நாதனு? வாருமய்யா!' என்று முகமலர்ச்சி காட்டினர் கவி.

தொண்டர் நாதன் ADழை பொழியத் தொடங்குகிறது. விண்ணிடு குந்து விழும் துளிகளை முதலில் மண் தாகத் தோலி உறிஞ்சி விடுகிறது. பூமி நன்முக நனைந்ததும், துளிகள் பல கூடி நகர ஆரம்பிக்கின்றன. தண்ணிர் நன்முக ஒடுகிறது. பிறகு, வேகம் அதிகம் பெற்று வாய்க்கால்கள் போலவும். சிற்ருேடை போலவும் தண்ணிர் பெருகிப் பாய்கிறது. பல பகுதிகளிலிருந்தும் ஒடிப் பெருகும் தண்ணிர் கால்கள் ஒன்று கூடி, பெரிய ஆற்றின் வெள்ள : புரண்டு மிகுந்த சக்தியோடு முன்னேறிச் செல் கிறது.