பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25 ஏகமாய் வந்த படைகுருவி மேல் ' வேகமாய் வேட்டைக் கெழும்பு மென்முன். வானமும் பூமியு மதிர்ந்திடவே நானும் தானுமே இப்போது அங்கே சென்று 3莎8ü ஆனலு மாகுது போனலும் போகுது அடிக்கிறேன் பாரொரு தம்மாசு. சீக்கிரம் வேட்டைச் சவாரி யென்ருன் தம்பி சேவுகர் சேர எழும்பு மென்ருன். மூக்கிலே கோபமிருக்கும் ஊமைத்துரை முன்னேறிப் பாய்ந்தாரே அந்நேரம். சின்னத்தளவாய் பெரிய தளவாயும் பொன்னு சிவத்தையா முத்தையாவும் மன்னன் குமரய்யா வேடபட்டி துரை மாப்பிள்ளை நாயக்கர் வெள்ளையாவும் 359● கம்பளச் சேருவைக் காரரிலே தம்பி ஐம்பது பேர்கள் தயாராக சம்ரதாயம் வெளியேறி விட்டார், கதை சமர்த்தைக் கேளுங்கள் நல்லோரே. ஈட்டி சமுதாடு கத்திகளும் எரி ஈட்டிகளும் பலா ஈட்டிகளும் தாஷ்டீகர் கையிலெடுத்துக் கொண்டு பாஞ்சைக் கோட்டையும் விட்டு வெளியேறி ராத்திரி காலத்தில் பத்துப் பதினைந்து நாழிகையான தோர் வேளையிலே 360 (; காத்தாடி போல் விசை கொண்டுமே தம்பியும் கூத்தியாக் கள்ளன் போல் வேகங் கொண்டு காட்டுப் பாராவுங் கடந்தன ளுமிங்கே மாட்டு மாட்டென்று எழும்பினராம். ஈட்டி எடுத்துக் குலுக் கினராம் குதி போட்டுக் குலவைகளிட் டனராம். மன்னன் ஊமைத்துரை மீசைமேல் கைபோட்டு வல்லையம் நேரிசம் தானெடுத்தார். உன்னி யெழுந்து குதிபோட்டார் செங்கை தன்னில் பட்டாக்கத்தி தானெடுத்தார். 36 0 அந்நேரந்தானங்கே கும்பினி யாருட அக்கினித் துரை பட்டாளம்