பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்கதேவி'துணை கட்டபொம்மு சரித்திரக்கும்மி வணக்கம்" சீர்பொருந்துங் கட்டபொம்மு துரையின் மீதிற் செந்தமிழ்க்கும்மி பாடல் திறமாய்ச் செப்ப ஏர் புகழுஞ் செந்தில் வளர் கந்தன் தானும் பரிவுடனே தயவு செய்வன் பனுவல் மாதுங் கார் போன்ற மேனியனுங் கமலை தானுங் கவிக்கு நித்த மருள் புரிவான் கருனே கூர்ந்து பேர் பொருந்து மிக்கவியை யானும் பாட இசைக்கின்றேன் செந்தமிழோ ரேற்றந் தானே. காப்பு பாரார் புகழுகின்ற பாஞ்சை நகர் மன்னவர் மேல் சீராய் தமிழ்பாடச் சென்னி திங்கள் கங்கை கொன்றைத் தாரார் முடிபுனேயுஞ் சம்புவா புத்ர னெனுங் காராரு மைங் கரன் தன் கழல் வினையே காப்பாமே. அட்ட திசை யெங்கனுமே திக்கு விசயஞ் செலுத்தி யாண்மை பெற்ருேன் கொட்ட மிடுமயலார்கள் மகுடமுடி கிடுகிடெனக் குருதிபாய வெட்டி விருதிட்ட துரை திட்ட நகர்க் கதிபதியாம் வீரபாண்டியக் கட்டபொம்மு தரிசனமே" சுப்ரமணியர் தரிசனம் போல் காணலாமே ஓராறு மாச மழை மாரி பெய்யுமிக் காட்சினியி லோராறு மாசங் கோடையாய் விடு முர்ப்பனஞ் சேர் சீராறு பாஞ்சை செகவீர பாண்டியன் செங்கை ரெண்டும் ஈராறு மாசமும் பொன்மாரி பெய்யு மிரவலர்க்கே சீர் பொருந்துங் கட்டபொம்மு துரை மீதில் செந்தமிழ்க் கும்மி தமிழுரைக்க கார் நிறம் பெற்றருள் வேழ முகத்தோனே கந்தா நின் பொற் பதங் காப்பாமே! செல்வம் பொருந்தும் பாஞ்சால நகர் வளர். தீரன் மேல் கும்மித் தமிழ்பாட கல்விக் கருள் புரி வெண்டாமரை மலர்க் கன்னியின் பொற் பாதங் காப்பாமே