பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஜாக்சன் கோபம் அப்படியாக் கொத்த கட்டபொம்மு தன்னை இப்பவே தானும் வரவழைத்து செப்பமாய் ஞாயமுந் தீர்க்கு கிறேனவர் துற்புத்தி தன்னை யொடுக்குகிறேன் வீரமிகுந்திடும் கட்டபொம்மேந்திர தீரன் குறும்பை யொடுக்குகிறேன் தாரணி தன்னிலரசு செய்யுங்கர்வத் தாலே தானேழு வருஷமுமாய் தோப்புரு "பணமுஞ் செலுத்தாமல் வலு துஷ்டனடா கட்ட பொம்மனுந்தான் 2 1 {} தாப்பான பாஞ்சைப் பதி தனிலே அவர் தன்னரசாய்ச் சீமை யாளுகிருர் கோட்டைகள் போட்டுத் துரைத்தனஞ் செய்கின்ற கொள்ளைக்காரக் கட்ட பொம்மனைத்தான் பேட்டியா வரவழைத்து ஞாயம் பேசிடவேணு மென்றே நினைத்தார் மாயா விநோதனும் சாகீசருமந்த மன்னன் கமிட்டி யாலோசனையால் ஞாயமாய் மேஷதிரட்டா பீசு போலீசு ஞாயங்கள் செய்திட வேணு மென்று 220 ஜாக்சன் கடிதம் கட்டுக்கடங்காத கட்டபொம்மு துரையை இஷ்டமாய்ச் சந்திக்க வாருமென்று திட்டங்களாகவே கும்பினிக் காகிதம் சீக்கிரம் கண்டித்தே யெழுதி டப்பை எழுபத்திரண்டு பாளையமும் இப்பவே வந்திட வேணு மென்று செப்ப மாய்க் காயிதம் தானெழுதி வெகு சீக்கிரமாகவே கையெழுத்தும் முத்திரை வைத்து முகரும் வைத்து அதை மூன்ரும் பிறை போல மடித்து வைத்து 盛岛{} விஸ்தாரக் காயிதம் தானெழுதி அதை வேகமாய்த் தபாலிலனுப்பிளுைம் காயிதம் வந்ததே பாஞ்சைப்பதிதுரை கட்ட பொம்மு பிரதானியிடம்