பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தாயே உமையே பரி புரியே சக்க தேவியெனக் காக்க வேணுமம்மா ஆண்டவளே லோக நாயகியே யென்னை ஆதரிக்குஞ் சக்க தேவியம்மா வேண்டிய வரங்கள் தனக் கொடுக்கும் எங்கள் வீரமல்லு சக்க தேவியம்மா ஒன்பது கம்பள வீரமல்லு நல்ல உத்தரவு சக்கா தேவி சொல்லு நம்பின பேர்க்கு உதவி செய்வாய் லோக நாயகியே சக்கதேவி சொல்லு 520 தஞ்சம் உனை யல்லாலில்லை யடிமா தேவதையே சக்க தேவி சொல்லு அன்புடன் நல்வாக்குச் சொல்ல வேணும் நானும் கும்பினியார் பேட்டி செய்ய வேணும் ஞாய மென்று சொல்லி கும்பினியாரிப்போ நம்முட பாஞ்சை நகர் மீதில் காயிதம் போட்டவன் சாகிஷன் மேசரைக் கண்டு பேட்டி செய்யப் போறதினுல் காட்டிக் கொடுக்காதே சக்க தேவி கடைக் கொம்பிலே நில்லாதே சக்க தேவி むぎ0 யென்று பணிந்தாரே கட்டபொம்மு துரை யெல்லோருங்கை கூப்பித்தான் தொழுதார் நின்று தொழுதான் பிரதானி, அப்போ நிமித்தஞ் சொன்னுளே சக்க தேவி பல்லி நிமித்தம் பல பலென்று சொல்ல நல்லது சோசியம் பாரு மென்ருர் வல்லவன் தும்பிச்சி நாயக்கரும் சோசியம் மார்க்க மாய்ப் பார்த்து மொழிந்தனராம். காரியமாகவே நேர்மையுடன் கெவுளி ஒலி பார்த் தங்கே மொழிய லுற்ருன் 540 வீரிய மாகவே சொல்லு தென்ருன வீர பாண்டியனே சொல்லக் கேளுமென்ருர் இந்த நிமித்தம் பலன் சொல்லுதே நாம ளிப்போ பயணம் புறப்படவே, சந்தேகமில்லா மல்ச் சாகிஷன் மேசரும் சந்திப்புப் பேட்டி கொடுக்க மாட்டார்