பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# * * சதிரருள் தென்கூடல் வாசமென்று அங்கே தானே பசலி யிறங்கினர்கள் சம்புசதாசிவ சொக்கலிங்கம் எங்கள் தாயே பரஞ்சோதி மீளுகதி நம்பின பேரையுங் கார்த்து ரட்சியென்று நாற்பது பொன்னங்கேதான் கொடுத்தார் பூசை நெய்வேதியந்தான் பார்த்துத் துரை போசனஞ் செய்துமே தான் முடித்து பேசுந் தெய்வ மதுரை மீளுகதி யென்று பேரணியாகவே தானடந்து 183, U. கட்டபொம்மேந்திரன் சேனைத் தளத்தையும் கம்பளத்தார் சம்ரதாயத்தையும் மெட்டான கர்னல் சகிஷன் துரையுமே விஸ்தாரமாய் நின்று பார்த்திடவே மதுரை விட்டு வெளியேறி துரை மன்னவன் வர்ணப் பரியேறி விதுரன் போலவே கட்டபொம்மு துரை மேலுார்ப் பாதைவழி நடந்து சேனைத்தளத்துடன் தானே விலாசமா ப்த் திருச்சிராப் பள்ளி நகர் சேர்ந்தார். 1860 ஆணையேறி வீதி சுத்தினராமங்கே தானே மசலி யிறங்கினராம். அங்கே துரை மார்கள் பங்களாவும் மேஷ ரிங்கிலீசு வெள்ளைக்காரர் வீடும் சங்கையுடன் பேட்டி செய்தனராம் வெகு யிங்கிதமாகவே நடந்தனராம். திருச்சிராபுரந் தான் கடந்து அங்கே சென்ன பட்டணமும் போய்ச் சேர்ந்து மருமலர் வாசளுங் கட்டபொம்மு துரை பிரபலமாகக் கொலுவிருந்தார். 1870 விஸ்தாரக் கூடராம் வேடிக்கையாய்ச் செய்து மேன்மைகளாய்க் கொலுவீற்றிருக்க கஸ்தூரி வாசங் கமகமென ೨|ುತಿಹ । கம்பளத்தார் வந்து சூழ்ந்திருக்க மெட்டுகளுங் கோட்டை திட்டுகளும் சென்ன பட்டணம் பார் பாரா மெட்டுகளும்.