24. அரண் ஆற்றிய படலம் 2406 முடி பூண்டது. ஆதலால் அரசை யாள அணிமுடி புனேய லாற்றேன் காதலால் அமரை நாடிக் களித்துளேன் என்ருன்: கின்ருர் சாதனை செய்யப் பட்டம் தான் கட்டிக் கொள்ள நேர்ந்தான்: பூதலம் புரக்கும் கோலம் பூண்டுபொன் முடியும் பூண்டான். Ꮨ Ꮞ07 காட்சி தந்தது. உற்றவர் எல்லாம் தத்தம் உரிமையின் உவந்து சூழ்ந்து பெற்றனம் அரசை என்று பெருமகிழ் வுடன் களித்தார்: வெற்றிவேல் வீரர் வாழ்த்த வீரசிங் காத னத்தில் கொற்றவன் அமர்ந்து காட்சி கொடுத்தனன் குறித்தி ருங்தே. 24.08 பவனி வந்தது. மத்தமால் களிற்றின் மீது மாண்புடன் அமர்ந்து முன்னே சத்திரம் கொடிக ளாதி சதுருடன் தாங்கிச் செல்ல, எத்திசை மருங்கும் சால இன்னியம் முழங்க, யாரும் சித்தங்கள் மகிழ்ந்து போற்றச் சிறப்புடன் பவனி வந்தான். 24.09 விருந்து புரிந்தது. நகர்வலம் வந்து செய்ய நன்மணி மாடம் எய்தித் தகவுயர் பீடம் சார்ந்து சால்புடன் தனி அமர்ந்து -653 {33) (34) (35)
பக்கம்:வீரபாண்டியம்.pdf/500
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை