பக்கம்:வீரபாண்டியம்.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 வீ ர பாண் டி ய ம் 28.23 படுகளம் பட்டது. நீண்டவேல் வெடிக ளோடு நேரலர் நேர்ந்து போரில் மூண்டுமுன் பொருதுகின்ருர் முரணறமுடிந்து வீழ்ந்தார் மாண்டவெம் பினங்கள் கோட்டை மருங்கெங்கும் பரந்து (மண்டி ஈண்டிய சவக்கா டாகி யிருந்தன எவரும் காண. (100) 2824. பிணங்களின் நிலை. இரவிடைச் சிறிது வானம் இருண்டுது வினதா லங்குப் பரவிய படுக ளத்தில் பட்டவெம் பிணங்கள் எல்லாம் விரவிமே லூதி வெய்தாய் விங்கிநைக் துழந்தி ருந்த தரமதை அறிந்து மாற்ருர் சாலவும் வருந்த லானர். 28.25 பருந்துகள் அருந்தின. அருந்திற லுடைய வெள்ளே வீரர்கள் அயல்நாட் டிங்கே பொருந்திற லுடன் புகுந்து பொருதுநேர் பொன்றி வீழ்ந்தார் திருந்தலர் சிரித்து நோக்கச் சேர்ந்தவோர் நாதி யின்றிப் பருந்துனும் பிணங்க ளாகப் படவிடல் பழியா மன்றே. 2826 காய்கள் தின்றன. நாய்கள் வெங் கழுகு காகம் நரிகளும் நச்சித் தின்னப் பேய்கள் நள் எளிரவில் வந்து பிடிங்கிவா யுண்ணப் பேணி ஈய்கள் மேல் மொய்த்து வீழ இழிவுடன் கண்டோர் எல்லாம் சீயென இகழ்ந்து பேசச் செத்தவர் கிடந்தா ரங்கே. (103) 2827 தளபதி தயங்கியது என்றுனம் வருந்திச் சேனு பதியிடம் சிலர் போய் நின்று ஒன்றிய நிலையைச் சொன்னர்; உடனவ னுணர்ந்து நன்றே இன்றுபோய் நின்று நாமங் கெவ்வகை எடுப்ப தென்னுத் துன்றிய துணேவ ரோடு சூழ்ந்துநேர் துணிய லானுன். 2828 சூழ்ந்து துணிந்தது. வெந்திறற் பகைவ னுார்பால் மேவிய பிணங்கள் தம்மைச் சொந்தமென் றெடுக்க நாம்போய்த் தொடங்கினல் துன்னர் (சூழ்ந்து முந்துறப் பொருவ ராயின் முடிவுமேல் முடியு மன்றே அந்தரம் தெரிந்த பின்பே அணுகுதல் வேண்டும் என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/589&oldid=913128" இலிருந்து மீள்விக்கப்பட்டது