பக்கம்:வீரபாண்டியம்.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 வி ர பாண் டி ய ம் 2.942 மாற்றலர் மாண்டனர். பாய்ந்து வெம்பரி பறந்தலே பறந்துற விரைந்து காய்ந்து தன்வடி வாளொடு கறங்கெனத் திரித்தான் மாய்ந்து வீழ்ந்தனர் மாற்றலர்: பலர்தலை யுருண்டு சாய்ந்து முண்டங்கள் தனித்தனி துள்ளின. தரையில். 29.43 மறுகிப் பதைத்தனர். வந்து மேல்விழு வன்படை மறுகணம் தலைகால் சிந்தி வீழ்ந்துசெங் குருதியில் புரண்டன; திரண்டு முந்தி மூண்டுதிம் பரிகளே முரணுற முடுக்கிப் பந்தி பங்தியாய் வந்தவர் பட்டுயிர் பதைத்தார். (56, 2.944 புழு எனத் துடித்தனர். பரியில் ஏறிய மறலியிற் படுகள மேறி அரியின் ஏறென ஆண்டகை வாளொடு திரியக் கரியில் ஏறிய கனலெனக் கனன்றுமுன் கடுத்தார் எரியில் ஏறிய புழுவென இறந்து பின் துடித்தார். (57) 2945 சேபைதி திகைத்தான். எய்த குண்டுகள் இடிமழை எனவிழ எதிர்த்தே ஐயன் வேலனே அகத்தினில் நினைந்தடல் வாகன வெய்து வீசிமுன் வீரவெங் திறலொடு விரைந்து செய்த போரினேச் சேனேமன் கண்டுளம் திகைத்தான். 2.946 அமராடிய திறம். * சுட்ட குண்டுகள் தப்பியும், தொடர்ந்துமுன் னேறித் தொட்ட வேல்களேத் தட்டியும், துணிவுடன் அயலே' எட்ட கின்றடர் எறிகளே விலக்கியும், மன்னன் வெட்டி ஏறிய விரகினே ஏவரே வியவார்? (59). 2.947 பாஞ்சை வீரர் ஏறினர்.

  • -

வீர மன்னவன் வினேயினி லேறவும் துணையாய்ச் சேர கின்றவன் தலைவரும் சேனையும் செருக்கி ஆர வேறிகின் றடலமர் புரிந்தனர்; அமரார் சீர ழிந்தனர். திசைதிசை பிரிந்தனர்: சிதைந்தே. (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/611&oldid=913170" இலிருந்து மீள்விக்கப்பட்டது