பக்கம்:வீரபாண்டியம்.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 694 வி ர ப ா ண் டி ய ம் 3588 பெரிய தோல்வி. நீண்டபெருஞ் சேனைகளே நிரைகிரையா நீட்டிவந்து மூண்டகொடும் போர்ஆற்றி முரணழியா அரண் அழித் (தோம்; மாண்ட கடும் பகைவயைப் மண்டிநின்ற மன்னவனே ஈண்டுநாம் பற்றவில்லை இதுபெரிய தோல்வியன்ருே? 3589 கிருபங்கள் விடுத்தார். மறைந்தகன்ற ஊமையனை மாநிலத்தில் எங்கேனும் உறைந்திருக்கும் இடங்காட்டி உதவுவரேல் அவர்க்குடனே கிறைந்தபெரும் பரிசுகளும் நிலநலமும் தருவம்என அறைந்து பல கிருபங்கள் அங்கங்கே விடுத்தாய்ந்தான். 3590 பொருள்களை எடுத்தார். சேனேயதி பதியிங்கன் தேசம்எங்கும் தேர்ந்தாய்ந்தும் ஆன பயன் ஒன்றுமின்றி அகமயர்ந்தான்; அழிந்தவனும் வானடைந்தான் என எண்ணி மாநகரம் தனிலிருந்த ஏனையுயர் பொருள்கள் எலாம் எடுத்தேற்றி இடம்சேர்த் (தான். 359 வெள்ளையர் கொள்ளையராயினர். வெள்ளேயர்என்று அயலறிய மேவலராய் மேவிவந்தார் கொள்ளேயர்என் றுலகறியக் கோட்டையுள்ளே கூடியே உள்ளபொருள் எல்லாமே உள்ளமுவந்து அள்ளினர் வென்னமெனப் பேராசை விரியவே வெறிகொண்டார். 3592 கண்டபடி வாரினர். பிணவெறியர் ஆகியே பெருங்கொலைகள் புரிந்தார்பின் பனவெறியர் ஆய்நீண்டு பாஞ்சைநகர் உள்புகுந்து குணமுடைய மணியணிகள் கூறரிய கனகமுதல் கணமுடைய பொருள்களெலாம் கண்டபடி வாரினர். 3593 எல்லாம் கவர்ந்தார். காலிலக்கம் பொன்களொடு நவமணிகள் நல்லணிகள் காலைஒத்துப் பாப்கின்ற கடும்பரிகள் கரிநிரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/741&oldid=913450" இலிருந்து மீள்விக்கப்பட்டது