பக்கம்:வீரபாண்டியம்.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 695, வலஒத்த விழிமடவார் விளிந்தபொழு திடைவிழுந்த பாலஒத்தமுத்துவடப் பத்திஎலாம் பாய்ந்தெடுத்தார். 1594 யாவும் அள்ளினர். குடைகொடிகள் சாமரங்கள் கோலமணித் தண்டிகைகள் உடைகளுயர் நெற்பொதிகள் ஒட்டகங்கள் கட்டமைந்த படைவெடிகள் வாள்வேல்கள் பல்வேறு பணிவகைகள் விடைகள் பசு நிரைகள் எலாம் வேறுவேறுறக்கவர்ந்தார். 3.595 உள்ளம் களித்தார். திருமகளுக்கு உறைவிடமாய்ச் செழித்திருந்த பாஞ்சைநகர்ப் பெருவளங்கள் யாவுமே பேணலர்கள் மிகவாரி ஒருகளத்தில் உறத்தொகுத்தார்: உயர் அரசவனமுறவே அருவளத்தர் ஆயினர். அகமகிழ்ச்சி மீக்கூர்ந்தார். 3596 உருமாறி கின்றது. பெருவரரி நீர் இழந்த பெற்றிபோல் பெருநகரம் உருமாறி உயிர்பிரிந்த உடலாகி ஒளியிழந்து திருமாறி நின்றதந்தோ திரையாழி நிலவாழ்வை ஒருவாழ்வா உள்ளியுளம் செருக்குவரோ? உணர்வுடை ALITIF 3597 உலகோர் பரிதபித்தார். போர்மகட்கும் கலைமகட்கும் புகழ்மகட்கும் கிலேயமாய்ச் சிர்வளங்கொண் டினி திருந்த தென்பாஞ்சை சீரழிந்தே ஒர்வளமும் இல்லாமல் ஒன்னலன்கைப் பட்ட துனைப் பார்வழங்கிப் பலபுலம்பிப் பரிதபித்து கின்றதுவே. 3598 எட்டனுக்கு அளித்தார். தென் பாஞ்சைக்குரித்தாகச் சேர்ந்திருந்த நகர்களெலாம் அன்பாக எட்டப்பற்கு அளித்துஆன வரிசெலுத்தி இன்பாக வருகவென இனிதியம்பி இதம்செய்தார் முன்பாக அவன்புரிந்த முதல்உதவிக்கு இதுபுரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/742&oldid=913452" இலிருந்து மீள்விக்கப்பட்டது