பக்கம்:வீர காவியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|

வீரகாவியம்

116



இயல் 51
பத்துத் திங்கள் முற்றிய பின்னர் முத்துப் பிள்ளை பெற்றனள் அவளே.
'பிரிந்தவனும் இவண் வருவான்; திங்கள் நான்கில் பேரெழிலாய் மகன்வருவான்; பிரிவுத் துன்பம் இரிந்தொழியக் கண்டின்பக் கடலுள் மூழ்கி
எந்நாளும் திளைத்திருப்பேன்' என்ற எண்ணம் விரிந்துளத்திற் பொருந்துவதால் துயரந் தாங்கி
விசிதோகை மயிலனையாள் களித்தி ருந்தாள்; சரிந்துமணி வயிறணிந்து மாதம் பத்துச்
சரியாக நிறைந்துவர வயவு கொண்டாள். 226
o இடைவலியால் அவளுழன்ருள்; அவ்வ யாவால்
o 8! இன கொடிபோல் துவண்டுதுவண் டரற்றிநின்ருள்;
>r உடைநெகிழ வெய்துயிர்த்தாள்; வியர்த்தாள்; வாயால்
ஓவென்று குரலிட்டாள்; ஓங்கிக் கட்டில்
அடைவுறுமெல் லணையின்மே லடித்துக் கையால்
அதனைமிகப் பிசைந்தயர்ந்தாள்; மஞ்சம் பற்றிப்
பெடைமயிலாள் உடல் தளர்ந்து நெளிந்தாள்; பிள்ளை
பெறுவதன்முன் தாயர்படுந் துயரம் என்னே! 227
இரிந்து-நீங்கி வயவு -பேறு காலத்துயர். பெடை.மயில் - பெண் மயில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/119&oldid=911195" இலிருந்து மீள்விக்கப்பட்டது