பக்கம்:வீர காவியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வீரகாவியம்

134


என்னையினிப் பொருதுவெல யாரும் இல்லை; எவருக்கும் அஞ்சுதலும் இனிமேல் இல்லை; முன்னிவரும் புரவியிதன் மிசையி ருந்தே மூவகத்தை வென்றிடுவேன்; மதலைக் கோவும் தன்னுரிமை அரசிழப்பன்; எனது நெஞ்சின் தணப்பரிய கனவுகளும் நனவாய்த் தோன்றும் அன்னையுனை வணங்குகின்றேன்' எனமொ ழிந்தே அடல்மிகுந்த படையொன்று திரட்டிச் சென்றன். 270 வயத்தரசன் அவையகத்தே உளஓர் வீரன் வளங்கெழுமும் மூவகத்தை வெல்வான் வேண்டி நயத்தெழுதல் ஊர்முழுதும் பரவக் கேட்டு நல்ல.இளங் காளையர்கள் படையிற் சேர்ந்தார்: வியத்தகுநற் செயலுக்கு மகிழ்ந்த மன்னன் விறன்மிகுதன் கவசத்தைத் தலைவற் கீந்து பயக்கட்டும் பெருவெற்றி என்று வாழ்த்திப் பலமறவர் படைகளுடன் அனுப்பி வைத்தான். 271 மகப்பெறுபடலம் முற்றும். தனப்பரிய-நீங்காத நயத்தெழுதல்-விரும்பியெழுதல். தலைவன்படைத்தலைவகிைய கோரி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/137&oldid=911233" இலிருந்து மீள்விக்கப்பட்டது