பக்கம்:வீர காவியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

140


இயல் 59 கனகனின் ஒலையைக் கண்ட கோளரி மன மகிழ் வறவே மலர்த்திப் படித்தனன். 'நாட்டின்பால் பற்றுடைய இளைஞர் ஏறே! நாவலத்தின் மானத்தைக் காப்ப தற்கு வேட்டெழுந்த உன் திறத்தை நாடு போற்றும்; வெற்றியுடன் மீள்கஎன வாழ்த்து கின்றேன்; கோட்டைஎழும் வெண்ணகரம், மூவகத்தின் கோட்டருகில் வடதிசையில் விளங்கல் காண்பாய்! கூட்டமொடு சூழ்ந்ததனை முதலில் தாக்கிக் கோட்டையினை நின்வயமே ஆக்கிக் கொள்க! 280 பின்னருனக் கெளிதாகும்; மூவ கத்தின் பிடியுனது கையகத்தே வந்து சேரும்: நன்னரது வந்துவிடின் உலகில் எங்கும் நலம்விளையும்; நலிவுதரும் போரே யில்லை; பன்னரிய இது நினைந்தே மறவர் சூழப் படைத்தலைவர் இருவரையும் அனுப்பி யுள்ளேன்; நின்னுடைய சொற்கேட்டுத் துணையாய் நிற்பர்; நிகரில்லாப்போர்த்திறத்தர்' எனுஞ்சொற்கண்டான் 281 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கோட்டருகில் - எல்லைப்பக்கத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/143&oldid=911247" இலிருந்து மீள்விக்கப்பட்டது