இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
169
மகப்பெறு படலம்
இயல் 76
கோளரி யாரென ஐயங் கொண்டு
காளை யை வேழன் கழறினன் வியந்தே.
எனவுரைத்த மொழிகேட்டு நின்ற வேழன்
எல்லையிலா வியப்புற்றுத் திகைத்து நின்ருன்; 'கனவகத்தும் எனைப்பொருத நினைவோன் றன்னைக்
கண்டதிலை நாவலத்தில் இந்நாள் மட்டும்: எனைநிகர்க்கும் ஏந்தலென நுவலு கின்ருன்;
யாவனவன்? என் மனைவி வேல்வி ழிக்குத் தனயனிலை பெண்மகவே பிறந்த தென்ருள்;
தந்துரைத்தமொழிபொய்யோ?பொய்யோ சொல்வாள்!
மகனென்ருல் தனிமகிழ்வு கொள்ளுந் தாயர்
மகளென்று பொய்மொழியத் துணிவார் கொல்லோ? மகனென்ருல் எனைத்தேடி வாரா தின்னும்
மறைந்தங்கு வைகுவனே? வந்தே சேர்வன்; மகனென்ருல் இவனன்ருே மகனே யாவன்;
மகவெனக்குப் பெண்ணுகப் பிறந்த தந்தோ! மகனிவன் ருன் யாவன்?யாண் டிருந்து தோன்றி
மல்லுக்கு வருகின்ருன்? விந்தை! விந்தை! 340
எந்தல் - பெருமையிற் சிறந்தோன்.