பக்கம்:வீர காவியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

போர்ப் படலம்


இயல் 93 மாவேழன் யாவனென வினவி நின்ற மகனிடமே உண்மைநிலை மறைத்தான் வேழன். 'மனமிரங்கி இனியவுரை தந்தாய்! உண்மை மறைப்பின்றி எனக்குணர்த்த வேண்டு கின்றேன்; முனமிருந்தே உயர்ந்தமறக் குடியின் வந்த மொய்ம்புடைய மாவேழன் யாவன்? தோளில் தினவுயர்ந்த அப்பெருமான் உறைதல் யாங்கோ? செய்தியிது தெரியுமவா மிகுதி கொண்டேன்; எனதுமனம் மகிழவரும் அண்ணுல்! சற்றே இளகியருள் புரிகவெனக் கெஞ்சி நின்ருன். 397 கெஞ்சுமுரை கேட்டிருந்த வேழன் ஆம் ஆம் கேட்டாரும் நடுநடுங்கும் வீரங் கொண்ட நெஞ்சுடைய மாவேழன் ஒருவன் உள்ளான்; நெடியவன்பாற் பயின்றவன் நான்; என்னை வென்று விஞ்சியபின் நீஅவனைக் காண லாகும்; விழைந்ததெது? நின்னுயிரா போரா?' என்ருன்; வெஞ்சமரன் வேழனிவன் என்ற எண்ணம் வீணுகித் தளர்ந்திளவல் போரே என்ருன். 398 தினவு உயர்ந்த-போ ர்ச்செருக்கு மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/202&oldid=911377" இலிருந்து மீள்விக்கப்பட்டது