பக்கம்:வீர காவியம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

220


வாடிவரும் வீரனுரை கேட்ட வெய்யோன் "மாவேழன் தனதுடலில் படிந்த மாசை ஓடிவரும் புனலகத்துக் கழுவிக் கொண்டான் ; ஒப்பரிய வீரத்திற் படிந்த மாசை ஓடிவிடச் செய்வானே? அந்தோ! நாமே உலகறிய வொண்ணுமற் செய்வோம்' என்று மூடிவரும் இருளென்னும் திரையை யிட்டு மூழ்கினன் போய் மேற்புறத்துக் கடற்ப ரப்பில். 436

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/223&oldid=911422" இலிருந்து மீள்விக்கப்பட்டது