பக்கம்:வீர காவியம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

238


முகங்கண்டு மனமுடைந்து, குலக்கொ ழுந்தை முளைத்துவரும் பொழுதத்தே கிள்ளி விட்டேன்; அகங்கொண்ட என்மைந்தன் விழித்த லின்றி அமரகத்துத் துயில்கின்ருன்; குலம்வி ளக்கும் முகங்கொண்ட மணிவிளக்கை அனைத்து விட்டேன்; மூடிவரும் இருளொன்றே பரவக் கண்டேன்; இகழ்வுண்ட வாழ்வினிமேல் எனக்கெ தற்கோ? என்றலறி வீழ்ந்தவன்தான் எழவே யில்லை. 472

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/241&oldid=911463" இலிருந்து மீள்விக்கப்பட்டது