பக்கம்:வீர காவியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 50


இயல் 22 மாவேழின் காதலைத்தன் தோழி கூற மனமகிழ்ந்தாள் இனவாசி துள்ளித் துள்ளி. வழியின்மேல் விழிசெலுத்தி வரவு நோக்கி வளரிளமைக் கனவுகளில் மிதந்து நிற்கும் விழியழகி இளவரசி திருமுன், துTது வென்றியுடன் மீண்டவளும் வந்து நிற்க, அழிபசியன் அமுதுண் ண விரைதல் போல ஆர்வமுடன் துடித்தெழுந்து தோள்கள் பற்றி 'எழிலறிவு மிகுதோழி! கனியோ? காயோ? எடுத்துரைப்பாய் அவருரைத்த வெல்லாம்' என்ருள். 83 தோள் பற்றிப் புகழ்ந்துரைத்தோய்! என்பால் மாற்றம் சொல்லும் நிலை அவற்கில்லை; நின் க ருத்தை வாள் பற்றும் அவன் பால்முன் எடுத்து ரைக்கும் வாய்ப்பொன்றும் எனக்கில்லை' என்னு முன்னர்த் தேள் கொட்டி முடித்ததுபோல் துடித்து வஞ்சி, 'தீவினையேன் காதலுங்கைக் கிளையோ? அந்தக் கேள்பற்றி வாழ்வதுதான் வாழ்வே யன்றிக் கெடுவாழ்வு யான்வேண்டேன் மாய்வேன்' என்ருள், 84 அழிபசி - மிக்கபசி கைக்கிளை ஒருவர் மட்டும் விரும்புதல். கேள்-உறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/53&oldid=911541" இலிருந்து மீள்விக்கப்பட்டது