பக்கம்:வீர காவியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 52


'கன்னியர் தம் நெஞ்சத்திற் குடியி ருக்கும் காதலரைப் பெற்றுவிடின் வெறியில் மூழ்கித் தந்நிலைமை மறந்துமனம் மகிழ்வர் போலும்! தான் செய்வ தின்னதென உணரா திந்த மின்னிடை யும் தனை மறந்து களிப்பில் மூழ்கி மிதக்கின்ருள் திளைக் கின்ருள் என்னே விந்தை! பன்னரிய வெற்றியினுல் உலகம் காட்டும் பரிசிதுதான் போலு மென வியந்தாள் தோழி. 88 வியந்திருக்கும் தோழியின்ப ல் ஓடி வந்து விளையாட்டுப் பிள்ளை எனக் கன்னங் கிள்ளி, 'நயந்தவனை நானடையும் பேறு பெற்றேன்: நற்றவத்தின் பயன் நுகரும் வாழ்வு பெற்றேன்; உயர்ந்ததொரு பேறிதன்மேல் உண்டோ? தோழி! ஒளிவிளக்கை என்னுளத்தில் ஏற்றி விட்டாய்! பயந்தவரும் இசைந்துவரச் செய்தல் நின்றன் பாரமடி நேரமிது நல்ல தென்ருள். 89 ==== --- - 一つ =- སོག་───། ు-38 4. તરી ذ لم يك. كبير v> ーで「 *ー 「

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/55&oldid=911545" இலிருந்து மீள்விக்கப்பட்டது