பக்கம்:வீர காவியம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞரைப் பற்றி

பெரி யகுளம் என்ற ஊரில் சுப்பராயலு சீதாலட்சுமி என்பார்க்கு 7-10-1920இல் நன்மகனாகப் பிறந்த இவர் அவ்வூரிலேயே தொடக்கக் கல்வியைக் கற்றார். அப் பருவத்திலேயே கவிதை உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் இவர் தம் தாய்மாமனாகிய துரைசாமி என்பார். மேலைச்சிவபுரி-கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் 1943இல் முத்தியா லுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இப்பொழுது காரைக்குடி மீ. சு. உயர்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிகின்றார்.

1949இல் கலைச்செல்வி என்னும் நலத்தகையாரைத் தமிழ்நெறிக் காவலர் மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் கலப்பு மணம் செய்துகொண்டார். ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான இவர் இனிப் பெற்றெடுக்க விரும்புவது தலைசிறந்த நாடகக் காப்பியத்தையே என்கிறார். பாரதிதாசன் பரம்பரையில் முன்னணியில் நிற்கும் இவர்தம் கவிதைகள் 1966இல் தமிழக அரசின் பரிசிலைப்பெற்ற தோடு சாகித்திய அகாடமியால் இந்தியிலும் ஆங் கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இனிய இயல்பும், குழந்தை மனமும், உயரிய கொள்கையும், பிறழா உறுதியும் கொண்ட இவர்தம் கவிதைச் சிறப்பினைக் கண்டறிந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார் பறம்புமலையில் நிகழ்ந்த பாரி விழாவில் 'கவியரசு' எனப் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். மரபு பிறழ்ந்த கவிதைகளை அறவே வெறுப்பவர் இவர்.

தமிழே தெய்வமென வணங்கும் இவர், தமக்கு மொழியறிவூட்டிய ஆசிரியர்களையும் தெய்வ மென்றே போற்றுகின்றர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/8&oldid=1354159" இலிருந்து மீள்விக்கப்பட்டது