வீரகாவியம் 88
பாலிருக்கும், வகைவகையாய்ச் சுவைகள் நல்கும்
பழமிருக்கும், பக்கமெலாம் எழிலி ருக்கும்; மேலிருக்கும் கூரையெலாம் வரைந்தி ருக்கும்
மேன்மைபெறும் ஓவியங்கள் நிறைந்தி ருக்கும்; சேலிருக்கும் புனலலைகள் நெளிதல் போலத்
தென்றலிலே திரைச்சீலை அசைந்தி ருக்கும்; வேலிருக்கும் விழியாளும் வேழன் ருனும்
விரிந்திருக்கும் மாளிகையுட் புகுந்தி ருந்தார். 166
புகுந்தவர்தாம் புதுமைமிகும் உலகிற் சென்று
புக்கவர்போல் அமர்ந்திருந்தார்; இருவர் நெஞ்சும் தகுந்தகுமென் ருசையினுல் படப டத்துத்
தாளமிட உணர்ச்சிகொண்டார்; வடுவின் காயை வகுந்ததெனும் விழியாலே அவன் ந லத்தை
வாரியுண்டாள்; அவனுந்தன் விழிம லர்த்தி நகுங்கமல முகத்தாளின் அழகை எல்லாம்
நனியுண்டு மயங்கிமனங் களித்தி ருந்தான். 167
கையொன்ருல் சேயிழையின் மென் தோள் பற்றிக்
கன்னத்தை மற்ருென்ருல் தொட்டான்; அந்தக் கையொன்ரு முன்னமவள் நாணங் கொண்டு
காளையவன் தடந்தோளில் முகம்பு தைத்தாள்; மெய்யொன்றும் பொழுதத்தில் இருவர் தாமும் மேளிைற் கண்டறியா இன்பங் கண்டார்; பொய்யென்ருர் இவ்வாழ்வை அறியா மாந்தர்;
புதுமையிது புதுமையிது என்று வந்தார். 168
சேல்-கயல் வடு-மாவடு, வகுந்தது-பிளந்தது.