இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
95 மகப்பெறு படலம்
இயல் 4.2
மயங்கினள் ஒருநாள் மாது
வாடினன் வேழன்அப் போது.
மாடத்து நிலவரங்கில் ஒருநாள், காதல்
மணிப்புறவாய் அவ்விருவர் மகிழும் போது கூடத்துச் சென்றவள் வாய் குமட்டி நின்ருள்;
கொடுவேலான் பதைத்தோடித் தோள்கள் பற்றிப் பீடத்தின் பஞ்சணையின் சேக்கை சேர்த்தான்;
பேதையதன் மிசைமயங்கிக் கொடிபோற் சாய்ந்தாள்; வாடத் தன் காதலிக்கு வந்த தென்கொல்?
வாய்குமட்டி நின்றதென்கொல்? எனத் துடித்தான் . 178
மெல்லியகால் சுரந்துசிறி ததைத்தி ருக்க ,
மேனியெலாம் பசந்ததுபோல் தளர்ந்தி ருக்க, வல்லியவள் முகஞ்சிறிது செம்மை மாறி
வாட்டமுடன் விளர்த்திருக்கக் கண்டான்; போரிற் கொல்லியலின் திறங்கண்டும் இளகா நெஞ்சன்
கோதையிவள் நிலைகண்டே இளகி விட்டான்; வல்லினமும் மெல்லினத்தைக் கூடுங் காலை
வலிகுறைந்து மென்மைபெறல் உண்மை யன்ருே! 179