118 வீர சுதந்திரம் பகத்சிங் என்னம்மா சொல்லப் போறிங்க? பொது வேலையை விட்டுடு, உத்தியோகத்துக்குப் போ! உடம்பைப் பார்த்துக்கோ. கல்யாணம் செய்துக்கோ கைகட்டி கில்லு! இது தானே? வித்யா : இல்லேப்பா தேச மாதாவுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளைத் தாராளமாகச் செய்யலாம்! ஆனல் அந்தக் கடமையை நீ நீண்டகாலம் நீடித்துச் செய்ய வேண்டாமா மகனே. பகத்சிங் நீண்ட காலமா? எவ்வளவு சீக்கிரம் முடி யுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த காட்டுக்கு ஒரு விமோசனம் வர வேண்டும் அம்மா! வித்யா : அது முடியாத காரியம் தம்பி இவ்வளவு பேசும் பகத்சிங், ஒரே நாளில் உயர்ந்துவிடவில்லை மகனே! ஒரே வருஷத்தில் நீ இப்படி வளர்ந்திருக்க முடியுமா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் க ண் ணு ம் கருத்துமாகப் பார்த்துக் கவனமாக வளர்த்ததால்தான் என் குழந்தை பெரியவனுக வளர்ந்து விட்டான். வீரம் பேசுகிருன் உன்னே கான் வளர்க்க எவ்வளவு பாடுபட்டிருப்பேன்! அதே போலத்தான் தம்பி, இந்த காட்டின் சுதந்திர இயக் கம் மெதுவாக வளர வேண்டும்! ஆயுதங்களின் துணையால் ஆவேசம் வளருமே தவிர, இலட்சியம் வளராது தம்பி. பகத்சிங் : அம்மா தாயே! நீங்கள் பேசவில்லையம்மா? நீங்கள் பேசவில்லை. அன்பின் தெய்வம் பேசுகிறது. ஆயிரமாயிரம் வருடிைங்களாக இந்த மண்ணில் ஊறி வளர்ந்து உறுதியாகப் பண்பட்ட பாரதத்தின் காக
பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை