பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12} தோளைப்பற்றிய வண்ணம், பாறையிலிருந்து எழுந் தான் அவன் ; அவளைப் பின்பற்றினன். அலைகடலில் அலேந்து வந்த காற்று வெறி பிடித்து வீசியது. வீபான் பட்டுடை பறக்க முயற்சி செய்தது. அதை எடுத்துப் போட்டுக்கொண்டு நடந்தாள். மனையாட்டி பதித்துச் சென்ற தடத்திலேயே தன் சுவடுகளையும் முத்திரை வைத்த வண்ணம் நடந்தான் அவன். மேகலையை ரசித் தான். இருவர்;எதிர்ப்பட்டனர். தம்பதிபோலும் திருக் கழுக்குன்றத்தில் கழுகு உணவு கொள்ளும் காட்சியை அனுபவித்தபோது, அவர்களைச் சந்தித்தார்கள் சிரித் தாள் மேகலை, ஏனென்ருல், வந்த இணையின் அன்னப் பேடை புன்னகை இழையை வீசிச் சென்றது. அணி பெற்ற அந்தி மாலைக் கன்னி நீராழியில் முகம் பார்க்க நினைந்து விண் துறந்து மண் நாடி ஓடி வரலாளுள். சமாதி நிலையில் அமைந்தான் மாமல்லன். அரைக் கணப்பொழுது, கனவைக் கலைத்தாள் கனவுப் பதுமை. சதங்கைகள் குலுங்கின. நடை வண்டியை பையப் பையத் தள்ளப் பழகும் நேரத்தில், அந்தப் பாப்பாவின் கணுக்கால்களை அலங்கரிக்கும் வெள்ளிச் சலங்கைகள் சிரிக்குமல்லவா, அந்த இன்பப் பண்ணை நினைத்துக் கொண்டான் அவன். கொஞ்சிய சலங்கைகளுக்குப் பின்னணிக் குரல் தந்தது சிற்றுளியின் நாதம், கல்ை யையே உயிர்ப்பாகக் கொண்டு வாழ்ந்த ஆயனச் சிற்பி யின் மகள் சிவகாமியின் நினைவை யார்தாம் மறப் பார்கள்? தமிழ்ச் சரித்திரப் பேராசிரியர் அமரர் கல்கி அவர்களுக்கு மானசீகமாக மரியாதை செலுத்தப்பட்டது. மாமல்லனின் கண்களைத் துடைத்து விட்டாள் கடமையுள்ளவள். வாங்க அத்தான், வீட்டுக்குப் போவோம்!” என்ருள் அவள். - 'ஏன், மல்லைத் துறை உனக்குத் தொல்லை தரு கிறதா ?” 'எனக்கு அப்படி அடுக்கு மொழியோடப் பேசத்