பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வைக்கக் காருக்கு அருகில் சென்ருன். திருமாறன் கை கூப்பி விடை பெற்ற சமயத்தில், புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்தான் மாமல்லன். " தேவைப்படும் போது, நானே கேட்டு வாங்கிக் கொள் வேன், மாறன் ' என்ருன். மாமல்லன. இமை மூடாமல் பார்த்துக் கொண் டிருந்தான் திருமாறன். காரின் உள்ளே பரவி யிருந்த ஒளிக்கதிர்கள் மாமல்லனின் கண்களைத் தாக்கின. " மாமல்லன், இந்தப் பணத்தை நீங்கள் வாங்கிக் கொண் டால்தான், நான் நிம்மதியாகத் தூங்குவேன் :திருமாறன். ' மாறன், நான் அமைதியாக உறங்வேண்டுமானுல், இந்தப்பணம் உங்கள் வசம் இருப்பதுதான் நல்லது ' மறுமொழி என்ன அறிவிப்பதென்று வகை தெரி யாதவனுக திருமாறன் திண்டாடினுன், ம்...உங்கள் மனைவியை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் எனக்கு செய்தி அனுப்புங்கள். போன் நம்பர் இதில் உள்ளது,' என்று கூறி அச்சிட்ட துண்டுச் சீட்டு ஒன்றைக் கொடுத்தான், - கார் புறப்படத் துடித்தது. மாமல்லன், வருகிற திங்கள் கிழமை வடிவிட்டிங் பார்க்க வரவேண்டும். மேகலை யையும் கட்டாயம் அழைத்து வாருங்கள், மறந்து விடக் கூடாது, ” என்ற நினைவுக் கடிதத்தையும் எழுதிச் சமர்ப் பிக்க மறக்கவில்லை திருமாறன். - கூப்பிய கரங்கள் நான்கும் இருட்டில் பிரிந்தன. பூதலம் இருட்டறையில் ஊஞ்சலாடித் தவித்தது. ஒளி ஏற்றும் தீபமாக நிகழ்ச்சிகள் சில மாமல்ல னின் நெஞ்சத் தளத்தில் சுடர் சிந்திக் கொண்டிருந்தன. ஆளுல், பரந்த வெளிச்சத்தைப் பறந்தோடச் செய்து விட்டன. பல சம்பவங்கள். மிஞ்சியது இங்கேயும் இருள் தானே?... - - - இருளும் ஒளியும் கலவை சேர்ந்தது உலகம்; மெய்ப்பாடும் மாயையும் இணைந்தது.மனித வாழ்வு! இவ்'