பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 கட்டிலருகே வந்து, 'அத்தான், உங்களுக்கு அலுப் பாக இருக்கு மில்லேயா ?...முதலில் காப்பியைக் குடியுங்க : பிறகு பல் விளக்கி பலகாரம் சாப்பிட்டுவிட்டு ஒரு மூச்சு துரங்குங்கள். அப்பால் குளித்துக் கொள்ளலாம். இன்னைக்குத்தான் உங்களுக்கு விவாச்சே!” என்று யோசனை கூறினுள் மேகலை. எவ்விதமான சலனமும் இல்லாமல் எப்படி அவ் வளவு அமைதியாகப் பேச மேகலையால் முடிகிறது ? ஒருகால், எதுவும் இடை வெளியில் நடக்கவில் லையோ ?-"ஈஸ்வரா !” அப்போது மாமல்லனின் மனத்தில் பயங்கரமான முடிவொன்று முளைத்தது : “ம்...!” - 'நான் புது மாமல்லன் , ஆமாம், நான் நூதனமான மாமல்லன் ...விந்தை நிகழ்ச்சிகள் கக்கிய நச்சுப் பொய் கையில் அழுந்தி எழுந்த என் உள்ளம் என்னுடைய உடலையும் உருமாற்றி விட்டிருக்கிறது. மனிதனின் மாற்றத்துக்குக் காரணம், அவன் அமையும் பகைப் புலன் அமைப்பு என விளக்கவுரை தந்து மனிதனுக்குத் தற்காப்புக் கருவியாக அவதாரம் புரியும் அதே மணி மொழி என்னையும் என் சடலத்தையும், மனத்தையும் மனத்தின் மனச்சான்றையும் மாறுதல் கொள்ளப் பணித்துவிட்டன; என்னுள் இயங்கி, என்னை இயக்கும் உணர்வுகள் மாற்றம் பெற்றன். நான் புது மர்மல்லன் ஆனேன் , ஆக்கப்பட்டேன் ! . . . இரவு வந்தது. - . முகூர்த்தப் புடவை முத்துச் சிரிப்புச் சிந்த, மோக னப் புன்னகை மோடி கிறுக்க, உடன் வரமறுத்த திலவுப் பாவைக்குத் தாக்கீது அனுப்பிய கோலத்தை சிமிழ் உதடுகள் ஏந்த, ஒன்று இரண்டாகி அந்த இரண் டையும் ஒன்ருக்கி, அந்த் ஒன்றில் ஒன்ருக ஒன்றி உருப் பெற்றுக் கொண்டிருந்த க்ருப்பை உயிர் புத்துணர்ச்சி அருள, அவள் வந்தாள். அவள்-மேகலை ! * : " .. குனிந்த தலையுடனும் நிலை குத்திய பார்வையுடனும் கைகளில் முகத்தைச் சுமந்த்வாறு மோனத்தவம்