பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 உச்சிக்கு ஏறியது ; பார்வை துண்டுக் காகிதத்துக்குத் துள்ளியோடியது. " அன்புசேர் மேகலை, உன்னை இப்படித்தான் எனக்கு அழைக்கத் தெரிகிறது. ஆணிப் பொன் என்று விளிக் கட்டுமா ? மாற்றறியப் பயன்படும் உயர்ந்த ரகத் தங்கம்தான் ஆணிப் பொன். என்னை நான் உணர_ உபயோகப்படும் பசும் பொன் ஆயிற்றே நீ ! சென்னையும் அரியலூரும் இத்தனை நாட்கள் கனவுகள் மூலம் பேசிக் கொண்டன. ក្រៅ, என் மேகலையும் உன் மாமல்லனும் நேருக்கு நேர் பேசப் போகிருர்கள்...!...அழகின் ஆத ரிசப் பொருளல்லவா நீ!...அன்பிற்குப் பொழிப் புரை யல்லவா உன் நெஞ்சம் ... எல்லையற்ற பேரழகு நீ..! எங்கும் நிறைந்த பொற்சுடர் நீ..! அத்தான் என்ற முத்துச் சொல்லைச் சத் தான தொனியில் சொடுக்கிவிட வேளை பார்த் துக் கொண்டிரு. மாமல்லன். ' கிட்டத்தட்ட ஒராண்டுக்கு முன்னர் எழுதிய கடிதம் இது. இன்னமும் அது வைத்த இடத்திலேயே தான் இருக்கிறது. இதை மாமா பார்த்து விட்டால்...' என்ற அச்சம் அவனுக்குக் கைகட்டிச் சேவகம் செய்தது. என் ருலும், இதைப் பார்த்துக் கொண்டிருப்பது, மேகலையைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் இன்ப உணர் வைத் தட்டிக் கொடுத்தது-இத்தனை நாட்களாக, மாதங்களாக ! . . பத்திரிகையை அப்படியே மூடி மேஜையில் வீசினன். வீசின. அவசரத்தில் மேற்படி பத்திரிகை மட்டும் கீழே சரணடையவில்லை கூட ஒரு புகைப் படமும் விழுந்தது. 2. .