பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 துப் புத்தகங்கள் சில விருந்தளித்துக் கொண்டிருந்தன. பாவம், அவனுடைய இலக்கிய மனம் கும்பகருணனின் சுவடுகளைப் பின்பற்றியதை, நூல்கள் உணரவில்லை. விக்மெண்ட் பிராய்ட், வில்ஹம் விண்டட், பிரான்ஸிஸ் கால்ட்டன் போன்ற உளநூல் வல்லுனர்கள் அவ னுக்கு எவ்விதமான நிர்ணயத்தையும் கொடுக்கவில்லை. பின்ன்ர் குலோத்துங்கனின் விசித்திர நிலைக்கு அவ ஞல் எப்படி பரிகாரம் அமைக்க இயலும்? குலோத்துங்கனின் முப்பதாண்டுத் தொடர் கதை யில் எந்த ஒரு பக்கத்தின் சாரத்தையோ அல்லது, எந்த ஓர் அத்தியாயத்தின் உள்ளுறையையோ மாமல்லன் இதுவரை அறியவில்லை; ஆனால் இப்போது அவன் தெரிந்துகொள்ளத் தவங்கிடந்தான் ! நடுச்சாமத்திற்கு முத்தால் டிஜனி முன்னதாக குலோத்துங்கன் படுக்கையில் சாயப்போவதைக் கண் டான் மாமல்லன். உடனே அவனிடம் எழுந்து சென் ருன் அங்கிருந்த பாலேக் குறித்துக் காட்டி, தேவைப் படும்போது சாப்பிடுங்க என்று உரைத்தான். அவன் அப்போதே பால்க் குடித்துவிடுவான் என்று எதிர் பார்த்தான். சித்தன் போக்கு சிவன் போக்கு: என்கிற அவன் நிலையை மாமல்லன் உய்த்துணர்ந்தவன் அல்லவா! ஆகவேதான், தேவைப்படும் சமயத்தில் பால் அருநதச சொன்னன். இரவுக்குள் அவன் அதைக் குடித்துவிடமாட்டானு, என்ன ? திரிபுரம் எரித்த பின்னர் தான் விரிசடைக் கடவுள் சிரித்தாகும். ஆனால் இதோ, அந்த ஈசனையும் தோற் கடிக்கச் செய்துவிட்டவனைப்பேர்ல் மாமல்லன் அட்ட காசமாகச் சிரிக்கின்ருனே, ஏன் ? இவன் எதை எரித் தான்? யாரை எரித்தான்...? - - - கொட்டாவி பறிந்தது. உடலை நெளித்தான்; கைகளே உதறினுன் ; எழுந்தான். மேகலை கண் வள்ர்ந்து கொண்டிருந்த காட்சி அவன் கருத்தில் அகத்துறையை நினைவுகொள்ளத் தூண்டிற்று. ஆனால் அவன் அந்தக் காட்சியைத் தன் கருத்தைவிட்டு விலக்கிவிட முயற்சி செய்தான். குலோத்துங்கனை நோக்கினன். அவனிட