பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 த்ன்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்நெஞ்சே! J | சிந்தாமணி சென்னைக்கு வந்து சேர்ந்தாள். வந்த தும் வராததுமாக அவள் மேகலையிடம் கேட்ட முதல் கேள்வி, அண்ணி, என் அத்தான் வந்தாங்களா ?” என்பதுதான். மேகலை, "ஆமாம் ; நேற்றைக்கே வந்திட்டாங்க : இரவு இங்கேதான் படுத்துத் தூங்கிளுங்க !’ என்று இதமாகப் பதில் சொன்னுள். மாமல்லன் உறக்கம் கலந்து இரண்டு மூன்று விடிைகள்தாம் கழிந்திருக்கும். அதற்குள் பேச்சரவம் காதில் படவே, எழுந்து தலையணையில் முழங்கைகளைப் பதித்தவண்ணம் உட்கார்ந்திருந்தான். குலோத்துங்க னின் ஞாபகம் வரவே, அவன் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பார்வையை மாற்றினன். அவனைக் காணுேம் ! எங்காவது போயிருக்கக் கூடுமென்று நி னை த் த மாமல்லன், வந்திருந்த சிந்தாமணியை வரவேற்க எண்ணி படுக்கையைச் சுற்றியபோது, அவன் பேருக்குக் கடிதத் துண்டு ஒன்று இருந்தது. - "ஐயா! என் உயிரைக் காட்டிலும் என்னுடைய லட்சியக் கனவு முக்கியம். ஆதலால், நான் வாழத்தான் வேண்டும். அதற்காகவே இங்கி ருந்து வெளியேறுகிறேன். இப்படிக்கு, குலோத்துங்கன்.”