பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 மாமல்லனுக்கு நெஞ்சை அடைத்தது. ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்ட பாங்கிலே அவன் அரைக் கணம் நிலை மயங்கி உட்கார்ந்தான். நேற்று இரவு "அத்தான்!” என்று விளித்து ஓடி வந்த தன் இல்லக் கிழத்தியின் நினைவு வந்தது ; "நீங்க் திடீர்னு படுக் கையை விட்டு எழுந்ததுக்கும் கீழே கொட்டிப்போன பாலைக் குடிச்ச பூனை செத்துச் சிவலோகம் போனதுக் கும் எந்தத் தொடர்ச்சியும் இல்லேதான்; ஆலுைம், மனசு என்னமோ படபடத்துச்சு!" என்று அவள் பதறி யதை அவன் மறக்கமாட்டான். மங்கலமென்பது மனை மாட்சி என்னும் தமிழச் சாதி மறையை அவளும் படித்தவள் ! சிந்தாமணியும் மாமல்லனும் குசலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு, அவள் தன் அத்தானைப்பற்றிக் கேட்டாள். குலோத்துங்கன் தனக்குக் கிறுக்கி வைத்துத் சென்ற கடிதத்தை குப்பைக் கூடையில் கசக்கி வீசி ஞன் அவன் இப்போது அந்தப் பேதை நெஞ்சத்தை பேயாக ஆட்டி வைப்பவன்போல, "எங்கே சென்ருரோ தெரியவில்லையே!” என்று தொட்டும் தொடாமலும் விடை பகர்ந்தான். i "வாங்க சிந்தாமணி. உங்க அத்தானை எங்கிருந்: தாலும் நான் தேடிக் கண்டு பிடித்துத் தருகிறேன்!" என்ருள் மேகலை. இருவரும் சமையற் கட்டில் இருக் கையில் உரையாடல் ஆரம்பமானது. ‘எப்படி முடியும் நீங்க பெண் ஆயிற்றே...” "அதனுல்தான் அவ்வளவு துணிச்சலோடு சொல் கிறேன்!” - 'அண்ணி, வேண்டாம் ! அதுவும் நீங்கள் என் அத்தானைத் தேடிக் கண்டு பிடிக்கும் வேலையை ஏற்கவே வேணும்...!" ஏனும் ?? ご・ 。 "அதை தயவு செஞ்சு இப்போது என்னிடம் கேட்கா தீங்க, மேகலை !...”