பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ணம் வேறு திக்கில் மடங்கியது. நிழற்படங்கள் அடக்கி வைத்திருந்த் கூட்டை உதறினுள். முதன் முதலில் அவள் விரல்கள் பற்றியெடுத்த அந்தப் படத்தில் குலோத்துங்கனும் தானும் இருப்பதைக் கண்டாள். கட்டிய கணவனின் மேஜையடியிலிருந்து கண்டெடுத்த அதே படத்தின் வேறு பிரதி இது பிஞ்சுப் பிராயத்தில் எடுக்கப்பட்டது. அவள் நினைவி கூட்டிப் பார்த்து, முடிவு கூட்டிச் சிந்தித்த பழைய விஷயம் : திருச்சியில் பிறந்து வளர்ந்த குலோத்துங்கனின் பிஞ்சுப் பிராயத்தை அரியலூர் வளர்த்தது; ஏனென்ருல், அவன் தாய் தந்தையர் அங்கேதான் வயிற்றுப் பிழைப்பு க்கு ஒதுங்கினர்கள். அப்போது குலோத்துங்கனும் மேகல்ையும் ஓடிப் பிடித்து விளையாடிஞர்கள். ஒரே வட்டி லில் உணவு கொண்ட இடைப்பொழுதும் இருந்தது. "என் ஆசை அத்தான் ஒருவரைப் பற்றியே சதா நினைத் துக் கொண்டிருக்கும் எனக்கு மற்றவர்களைப்பற்றிய ஞாபகம் என் நெஞ்சில் எப்படி நிலைக்க முடியும் ?அதனுல்தான் அவளாகவே இந்தப் போட்டோவைப் பற்றி முன்பு மாமல்லனிடம் பிரஸ்தாபித்தாள். - அடுத்த உருவப் படம் விரலிடுக்கில் ஆடியது. பஞ்சனை மெத்தையில் சாய்ந்து பால்வண்ண நிலவொளி யில் மிதந்து கொண்டிருந்தாள் மேகலை. வேருென்று : குளிக்கும் அறையைவிட்டு வெளியேறிய நிலை. விற்புரு வங்களிடையே மானின் மயக்கம் : தாமரை முகத்தில் இளமைப் பருவ எழிற் சேர்க்கையின் செவ்வரிகள் ; இ.தடுகளிலே போதை யூட்டும் பாவனை : மாங்கல்யம் சரண் புகுந்த இடத்தில் மாண்புகொண்ட தமிழ்ப் பண்பு இளநகை புரிந்தது. மேகலைக்குத் தன் ப்டத்தைப் பார்த்தபோது என்னவோ செய்தது. வீசிளுள் மற்ற படங்களை நடுங்கும் கைகளால் அள்ளிளுள். எல்லாம்: மேகலையின் பல்வேறு கோணப் படங்கள்தாம் ! - உதிரத் துளிகளை மனக்கண் உதிர்த்துக்கொண்டே யிருந்தது. a. நாட் குறிப்பின் இதழ்கள் விலகின: