பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 லூருக்குப் புறப்பட்டான் மாமல்லன். திருமண ஏற். ப்ாடுகள் சம்பந்தமாக திருச்சியிலிருந்த உறவினர்களை அழைக்கக் குலோத்துங்கனும் மாமல்லனுடன் தொடர்ந் தான். அவன் நேரே திருச்சிக்குப் போக வேண்டியவன். மாமல்லன் அரியலூரில் விடை பெற்று இறங்கி மாமளுர் வீட்டுக்குச் சென்ருன். கனவும் காதலும் சமைத்துக் கொடுத்திருக்கின்ற தன் குழந்தையை - மேகலையின் பரிசுப் பொருளை கருத்தில் தேக்கி மகிழ்ந்த நாட்களை எண்ணியவனுக வாழ்வு தந்த மனையை மிதித் தான். மனம் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண்டிருந் தது. மேகலையை அழைத்தான். அவள் வரவில்லை. அவளைப் பற்றிய அறிவிப்பு வந்தது. - மலைக்கோட்டைப் பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பிறகே பட்டணத்துக்குப் புறப்பட விரும்பிய மேகலை திருச்சிக்கு விடிகாலை வண்டியில் - அதாவது, மாமல்லன் இறங்கி வழியனுப்பிய அதே ரெயிலில் குழந்தையுடன் சென்றிருப்பதாகச் செய்தி சொன்னுர்கள். ン -** .. 、 タペ . அடுத்த மூச்சுப் பிரியும் தருணம், மருதையாற்றில் ரெயில் கவிழ்ந்த விவரம் கிடைத்தது. . அரியலூர் ரெயில் விபத்துக்குப் பலியான உயிர்கள். பலவற்றுள் குலோத்துங்கன், மேகலை ஆகிய இருவரின் உயிர்களும் கணக்கில் அடங்கின.