பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ரைத் துடைத்துவிட்ட பிறகு, * இல்லிங்க, நான் அழலையே! என்ருள். கோசலை அம்மாளுக்குச் சிரிப்பைத் தவிர வேறெது வும் புலப்படவில்லை. _நல்ல பொண்ணு. இது இங்கே விந்ததிலேருந்து வீடே புதுக்களேயாத்தான் இருக் குது...! ஆன, மேகலை விஷயம் மாத்திரம் அப்படி நடந் திருக்காமல் இருந்திருந்தால், எவ்வளவோ சிலாக்கியமா யிருக்கும் .இந்நேரம்_மாமல்லனுக்கு முகூர்த்தத்துக் குத் தேதிகூடக் குறிச்சிருப்பேன் ...சிந்தாமணிக்கும் ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவும் முனஞ்சிருப் ப்ான் தம்பி ...ம்... எல்லாம் தான் மாறிப் போச்சே : கடவுளே கொஞ்சம் முந்தி நான் உன் கிட்டே வேண் டிக்கிட்ட அந்த வரத்தையாச்சும் கொடு...!_ஒரு அல்லிக் கொடிக்கு ஒரு_நிலாவைக் காட்டு! அப்பனே!' என்று நினைவு மலர்களைச் சரமாகத் தொடுத்து மனப்பீடத்திற் குக் காணிக்கையாக்கினுள் அம்மணி. வார்த்தெடுத்த தோசைகள் காய்ந்து கிடந்ததைக் கண்ட கோசலை அம்மாள், மறுபடியும் தோசைக்குக் கல் வைத்தாள். சூடான தோசைக்கு ஒன்று இரண்டு என்று வரிசை எண் கொடுத்து சிந்தாமணியைச் சாப்பிடச் செய்தாள் ; அப்புறம்தான் அவள் நல்ல மூச்சு விட்டாள். ' உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக் கேன். ' என்று கண்ணிர் மல்க, உணர்ச்சிப்பெருக்குடன் கூறினுள் சிந்தாமணி. கோசலை அம்மாள் சிரித்தாள். அவள் சிரிப்பின் உட்பொருளை ஊகித்தறிய சிந்தாமணிக்கு வயசு போத வில்லை ; அல்லது, அவளுடைய தலையில் நரை எதுவும் ஓடவில்லை. மாமல்லனுக்கு மத்தியான்னச் சாப்பாடு தயாரானது. வேலைக்காரி எடுத்துச் சென்ருள். கோசலை அம்மாளும் சிந்தாமணியும் பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்ட :னர். மாமல்லனின் அன்னை சிறு பொழுது ஒய்வு கண்டாள். இதுதான் சமயமென்று, சிந்தாமனிதன்