பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வகிடு எடுத்துத் தலை வாரினன் வீபூதி இட் டான். பிரயாணப் பையில் துணி மணி சாமான்களை நிரப்பிஞன். " சிந்தாமணி, எனக்கு ஒரு உபகாரம் செய்யறிங் களா ? ராத்திரிச் சாப்பாடு தயாராகிக்கிட்டிருக்குமே ! ஆனவரையிலே கொஞ்சம் போடுங்க... சாப்பிட்டிட்டு ப்ோறேன்... ஒரு அவசரக் காரியம். அம்மா வருகிற்துக் குள்ளே நான் போளுல்தான் நல்லது ” என்று பதட் டத்துடன் கூறினுன் மாமல்லன். - . சிந்தாமணி அவனே ஏற இறங்கப் பார்த்தாள். இதழ்க் கரையில் மென் சிரிப்பு மெல்ல ஒதுங்கியது. நீங்க அரியலூருக்குத் தானே போகப் போ நீங்க ?? ஒரு கணம் அவன் அப்படியே அசந்து விட்டான். அவள் விடுத்த கேள்வி அவன் வாயைக் கட்டி விட்டதை அவன் அறியாமல் இல்லை.

என் கேள்வி சரிதானே ?”

" எப்படித் தெரியும் உங்களுக்கு ” ' உங்க முகம்தான் அந்த ரகசியத்தைச் சொல் லுச்சு : ' பெண்களின் மன ஆழத்தை ஆண்கள் கண்டறிய முடியாது என்பார்கள்; ஆளுல் ஆண்களின் மன ரகசியங் தளையும் சேர்த்து அறிந்துகொள்ளும் சாகலும், இந்தப் பெண்களுக்குத் தலைகீழ்ப் பாடம் போலிருக்கிறது ! என்று அவன் நினைத்தான். . " சிந்தாமணி, உங்களிடம் நான் எதையும் மறைக்க முடியாது. என் கதையையும் என் மேகலையின் கதையை யும் நீங்கள் அறிவீர்க்ளென்றே நம்புகிறேன் அம்மா சொல்லி யிருப்பார்கள்!...நானும் மேகலையும புருஷன் மனைவியாக ஆகப்போகிருேம் என்று நாங்கள் மட்டுமல்ல -எங்கள் இருதரப்புப் பெற்ருேர்களும் தீர்மானித்திருந் ಶ*ள். அன்று எழுதப்ப்ட்ட எழுத்தை அழித்து எழுத