பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆண்டவன் எப்படித் துணிவான் ? பார்க்கிறேன் !... விங்கள் காதலுக்கு உரைகல்லாக அமைய ஒரு குறுந் தொகை முன்வர வேண்டாம் ; ஒரு சிலப்பதிகாரங்கூட 琵姆6磅宵 இரக்கம் காட்ட வேண்டாம் 1.எங்களுக்கு நாங்களே உதாரணமாக அமைந்து விடுகிருேம்...! எனக்காக என்னுடைய மேகலை காத்துக் கொண்டிருப்பாள்...! சிந்தாமணி, என் அன்பு மேகலையை நான் காணுவிட் டால், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்!...மத்தியானம் எங்கள் ஆபீஸ் பக்கம் யாரோ ஒரு பைத்தியம், யாரோ ஒருத்தியின் உருவத்தைச் சுவரில் கரித்துண்டால் கிறுக் கிக்கொண்டிருந்தது 1 என் கனவு சிதைந்தால், அவன் மாதிரியேதான் என் நிலையும் ஆகி விடும் ...ஆகவே, நிலைமை சீர்கெடுவதற்குள், என் மேகலையின் சொத்தை என் மேகலையிடமே சேர்ப்பித்துவிட வேண்டியது என் கடமை. அப்போதுதான் ஆடும் மயிலுக்கு, பாடும் அருவிக்கு, இசை பரப்பும் வீணைக்குப் பொருள் இருக்க முடியும் ' சிந்தாமணி ஏதோ சொல்ல நினைத்து, விழி வெள்ளத்தை விலக்கி, கண் பார்வையைப் பிரித்துப் பார்த்தபோது, அங்கே மாமல்லனேக் காணவில்லை. き。 பந்தத்தை நீக்கிவிடுஅல்லால் உயிர்ப் | பாரத்தைப் போக்கிவிடு...!’ . | } அரியலூருக்கும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸுக்கும் பல ஆண்டுகளாகச் சொந்தம் உண்டு; பந்தமும் இருந்து வநதது. . மாமல்லன் எழும்பூர் சந்திப்பில் நின்றதும்தான், அவனுக்குச் சுய சிந்தனை புறப்பட்டு வந்தது. புறப்பட