பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மூளை நரம்புகள் அறுபட்டு குருதி புரண்டெழத் தொடங்கிவிட்டதோ ?-மாமல்லனின் இதயம் அழுதது; மேகலைக்கென ஒதுக்கப்பட்ட அந்த இதயம் அழுதது. அப்பொழுது வாய்விட்டுச் சிரித்த நகைப்பொலி அவனது செவிகளில் உராய்ந்தது. என் கனவு பலித்துவிடுமென்பதற்கு அடை யாளமாக இந்தச் சிரிப்பு?...இல்லை, என் திட்டத்தை நினைத்து நையாண்டி செய்கிறதா அந்த விதி...? காலமும் தூரமும் மெய்யென்று வீசிப் பறந்த கொடியில் தெரிந்த கேள்வி இதுதான் ; அப்படியென் ருல், காதலும் கனவும் பொய்தாளு?’ தனித்த ஓர் உலகத்தின் பாதத்தில் ஒண்டியிருந் தான் மாமல்லன். அவனது உலகம் அவனே ஓய்வெடுக் குமாறு அனுமதித்தபோது, அவனுக்கு வ்ெளியுலகம் சிந்தையில் சூடேற்றியது. பெரியவர் ஏதோ ஜாதகக் குறிப்புக்களை வைத்து உன்னிப்பாகப் புரட்டிக் கொண் டிருந்தார்.

  • தம்பி, ஒரு பெரிய அதிசயம் ஒன்று என் வாழ்க் கையில் நடந்தது. அது ஞாபகம் வ்ந்தது. உடனே நான் எங்கேயோ பறந்து போனேன். நான் என் மாமன் மகளைக் கலியாணம் செய்து கொள்ள விரும் பினேன். என் மாமா பெண்ணுக்கும் என் பேரில் ரொம்பவும் இஷ்டம். மாமாவின் கண்ணில் வேருெரு பணக்காரப் புள்ளி தட்டுப்பட்டுவிட்டது. எங்கள் இருவர் ஜாதகமும் பேஷாகப் பொருந்தியிருந்தன. ஆளுல் அவை பொருந்தவில்லையென்று மாமா பொய் சொல்லிவிட்டார். - -

நான் வேறு இடத்தில் எங்கள் குறிப்புகளைக் காட்டினேன். வாஸ்தவமாகவே அவை பொருந்தி யிருக்கும் விஷயத்தையேதான் அந்த ஜோஸ்யரும் சொன்னுள். கடைசியில் நான் ஒற்றைக் காலால் நின்று என் மாமன் மகளைத்தான் கட்டிக்கொண்டேன். என்னவோ, காலம் நிற்காமல் ஓடி விடுகிறது. ஆளுல்