பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 காலம் பழக்கப்படுத்தி விட்டிருக்கும் சில அனுபவங்கள் மட்டும் ஓடாமல் நின்று விடுகின்றனவே, தம்பி ?...' நிதானமாகப் பேசினர் அவர். மாமல்லனின் மனம் அங்கு இருந்தால்தானே ? அரியலூர் வந்தது ; மாமல்லனுடன் பெரியவர் ரங்கரத்தினமும் இறங்கினர். ரெயில் நிலையத்திலிருந்து ஊர்ப்பக்கம் செல்வதற்கு மூன்றணு வண்டிச் சத்தம் பேசிஞர்கள் ; ஜட்கா வண்டி சத்தம் போடாமல் நகர்ந்தது. ஒரு நாள் கூத்து. மாமல்லன் அப்பொழுது பன்னிரண்டு வயசைப் பூர்த்தி செய்திருந்தான் ; பெற்ருேர்களுடன் திருச்சியி லிருந்து அரியலூருக்கு விருந்துக்கு வந்திருந்தான். விருந்தும் மருத்தும் மூன்று நாள் என்பார்கள். அவனுக்கு மருந்து தேவைப்படவில்லை. தேவைப்பட்ட விருந்தோ மூன்று நாட்களுடன் வரம்பு கட்டி அமைய வில்லை ; பதினைந்து நாட்கள் மேகலையின் இன்பச் சுற்றுச் சார்பில் நழுவின. தாய் மாமன் வீட்டில் சொல்லிக் கொண்டு புறப்பட்டான் சிறுவன். ரெயிலடி வரை சிறுமியும் கூட்டு வண்டியில் தொடர்ந்தாள். ரெயில் புறப்படக் கூக்குரல் எழுப்பிய தருணம், மேகலே யின் தகப்பனுர் மகளைத் தேடினர். சேரவேண்டிய இடத்தில் தன் சொத்து சேர்ந்து விட்டதை அறிந்தார். வண்டி நகர்ந்தது.

  • வாம்மா !” ஒடிஞர் சோமசுந்தரம். " ஹாடுக்கும் !...”

அமர்ந்தவள் அசையவில்லை. கண்ணில்லே : நான் அத்தானுேட கண்ணுக்கும்...? - வண்டி புறப்பட்டது. வேகம் இணைக்கப்பட்டது. மேகலை அவள் இஷ்டப்படியே அவளது மாமல்லலுடன்