பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அமர்ந்துவிட்டாள். அடுத்த வண்டியில் புறப்பட்டுச் சென்ருர் அவளது தந்தை. மேகலையை ஊருக்கு அழைத்தார். ' நான் அத்தான் கிட்டேயேதான் எப்பவும் இருப்பேன், ' என்று தீர்ப்புக் கூறிவிட்டாள் மேகலை, அவர் மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்த நாட்கள் பத்து இதயத் தளத்திலிருந்து சிலிர்த்தெழுந்த பெரு மூச்சு மேகலை யை அழைத்தது. தேரடி முனங்கில் பெரியவர் இறங்கினர். காலையில் பத்து மணி சுமாருக்கு அவரைச் சந்திப்பதாகச் சொன்னுன் மாமல்லன் ; ஜட்கா வண்டியில் அவரிடம் சொன்ன கதையை நினைவூட்டின்ை ; சட்டைப் பையி லிருந்து ஒரு காகிதத் துண்டையும் நீட்டிஞன். கொஞ்ச தூரம் கடைத்தெரு வழியே மாட்டுச் சதங்கைகள் பண் பரப்பின. அம்பாள் காப்பி கம்பெனியில் இறங்கிக் குளித்து விட்டு மேகலையைப் போய்ப் பார்க்கலாம், ! என்று தீர்மானம் செய்தான் அவன். தேடிச் சென்ற இடத்தை நாடிய போது, அவனுக்கு வரவேற்பளிக்க அம்பாள் கம்பெனி உரிமையாளர்கள் காத்திருந்தார்கள். அவர்களோடு திருமண அழைப்பிதழ் ஒன்றும் தவம் கிடந்தது. கல்யாணப் பத்திரிகையில் அவன் கண்கள் பதிந்தன. முன்னமேயே இந்தப் பந்தம் நீக்கப்பட்டிருக்கக் கூடாதா?...அ ல் ல து, இப்போது என் உயிர்ப் பாரத்தைப் போக்கிவிட மாட்டாயா?...தெய்வமே ! ஆவனுடைய உயிர்ப்பு நின்று விட்டது போல உணர்ந்தான் மாமல்லன். - .