பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கனவு அழிந்த போதே நானும் அழிந்த மாதிரிதானே ? நான் அழிந்துவிட்டால், என் அத்தானும் அழிந்து விடுவாரே இனி நான் என்ன செய்வேன்?...என் அத்தான் என்ன செய்வார் ? எங்கள் மனம் ஒன்று பட்டது போலவே ஜாதகக் குறிப்புக்களும் சரிவரப் பொருந்தியிருக்கலாகாதா?...” முத்துச் சுடரொளியில் உலக மள்தாவின் அருட் புன்னகை பளிச்சிட்டது. பித்தம் பிடித்துச் சித்தம் தடுமாறியவள் கணக்கிலே மேகலை சிலையென மலைத்து நின்ருள். கூப்பிய கரங்கள் பிரிந்தன. கண்ணிரின் கூக்குரலுக்கு அவள் காது கொடுக்க மறுத்தாள். அழுங்கள் ; நன்ருக அழுங்கள். படைத்தவனின் மனத்தைக் கழுவி அவன் உள்ளத்தில் பச்சாத்தாபம் உண்டாக்கவாவது அழுங்கள்; உங்களிடம் கடைசிச் சொட்டுக் கண்ணிர் வற்றுமட்டும் கதறிக் கதறி அழுங்கள். கண்ணிரை வைத்துச் சொக்கட்டான் ஆடும் ஐயனுக்குக் கண்ணிரை வரவழைக்கும் வரை ஓலமிட்டுப் புலம்புங்கள்...!” பச்சைக் குழந்தையின் மேனியின் பாவணையில் மிருதுவாக யிருந்தது அந்தத் திருமண மடல். தங்க ரேக்கு வண்ணம் கொண்ட எழுத்துக்கள் மேகலையைச் சுட்டெரித்தன. அவள் சுடுநோக்கினை வீசிளுள். திருநிறைச் செல்விமேகலை’க்கு அருகாமையில் இடம் பெற்றிருந்த திருநிறைச் செல்வன்ரின் பெய்ன்ரப் படிக்க மனம் மறுகினுள். வெடித்த நெஞ்சம் வடித்த ரத்தத்துளிகளை உலரவிடப் படுக்கையில் சரண் புகுந் தாள் மேகலை, - உதயப்பூ மடல் அவிழ்ந்து கொண்டிருந்தது. வெள்ளாளத் தெருக்கோடியில் நடைப்பிணம் ஒன்று பையப்பைய நடை பயின்று வந்தது. ஒய்யாரக் கொண் டையின் பொலிவு அவன் உடைகளில் மின்னியது. துகள் துகளாகிப்போன மனக் கண்ணுடிச்சில் ஒவ் வொன்றும் அவனது உருவத்தை மாத்திரம்ல்ல. உள் ளத்தையும் பிரதிபலித்துக் காட்டியது. கண்ணுடித் துண்