பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தேடிப்போன சிதேவி புள்ளிக்கோலம் இட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு முத்து முத்தமிட்டது. குனிந்திருந்தவுள் சரிந்து விழுந்த ம்ார்புச் சேலேயை எடுத்துப் போட்டவாறு நிமிர்ந்து எழுந்தாள். அது சமயம், "அத்தான் ' என்ற உறவு முறை புதுப்பிக்கப்பட்டது. மே.க...லே 1: பெரு மூச்சும் கண்ணிரும் பெயரிட்டுக் கூப்பிட்டன. "நான் எழுதின லெட்டர் உங்களுக்குக் கிடைச்சு * , * 33 o - - * துங்களா?' என்று விம்மிளுள் மேகலை. "உன் கடிதம் பட்டணத்திலேயே கிடைத்துவிட் டது; உன் கல்யாணப் பத்திரிகையை இங்கே வந்ததும் பார்த்தேன். ' மாமல்லன் சின்னப் பையன் ஆளுன் , தேம்பினன். "அழாதீங்க அத்தான், அழாதீங்க!” வாய்ச் சொற்கள் துயர்துடைக்குமென்ற நம்பிக்கை யில்லை. அவளுக்கு. ஆதலால் பூ விரல் கொய்து, மாமல்ல னின் விழி வெள்ளத்தைத் துடைத்தெடுத்தாள் மேகலை. உணர்வு தடம் புரண்டது; மேகலையின் மலர்க்கரம் பற்றினுன் மாமல்லன். 'மேகலை, அப்படியென்ருல், நம் இன்புக் கனவுகள் பாழாகிவிட வேண்டியதுதான?” என்று கேள்வி கேட்டான். நல்லுணர்வு சிலிர்த்தது. அவன் விலகினுன் மேகலை பதில் ஏதும் சொல்லவில்லை. முன் தினம் அவனுக்கு அவள் எழுதிய கடிதம் பதில் அனுப்பியது. - கடிதம் : “அத்தான், என்னை யாரோ ஒருவரிடம் பிடித்துக் கொடுக்க முடிவு செய்துவிட்டார்கள். மேகலை உங்கள் நிதி என்பீர்களே ! நிதி உங்களுக்கு வேண்டு' மல்லவா?-அப்படி யென்ருல், ஓடி வாருங்கள். வெண் னிலவு நீ எனக்கு என்று விஞ்டிக்கு விளுடி என்னைப் பார்த்துப் பாட்டுப் பாடுவீர்களே!-நிலவைக் கவ்விச் செல்ல கார்முகிலொன்று காத்திருக்கிறதே, பறந்துவர