பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மாமல்லனை அப்போது அவ்விடத்தில் கண்டதில் அவனுக்கு ம்ெத்த மகிழ்ச்சி, மனம் விட்டுச் சிரித்தான். சிரிப்பில்கூட பணத்தின் இதயம் பேச முடியுமோ ? மாமல்லனுக்கு சென்னைக்குக் காலையில்தான் அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தான் அவன். மாமல்லன் என்ன பதில் சொல்லுவான்? இல்லை. அவளுல் எப்படித்தான் பதிலளிக்க முடியும்? 'ம்' கொட்டித் தலையாட்டினுன். 'வ்ாங்க, மாப்பிள்ளை !’ என வரவேற்றபடி சோம சுந்தரம் உள்ளே நுழைந்தார். to . " ఖెల్తుకు மாமல்லனும் திருமாறனும் திரும் பிப் பார்த்தார்கள். ஆனல் திருமாறனின் முகப்பொலி வில் ஆமாம் ! என்ற் இணக்க பாவம் அழுக்தியிருந் தது. மாமல்லனுக்குக் கிடைத்த பலன் வழக்கம்போல கண்ணிர். திருமாறன் ஆசனத்தில் அமர்ந்தான். மாமல்லன் கின்ற இடத்திலேயே தின்ருன் கனவுத் தளம் கால் பட்டுச் சிதைந்ததுபோல ஏமாற்றம் அடைந் தான். "உட்கார், மாமல்லா !” என்று இரண்டாம் பட்ச மாகத்தான் சோமசுந்தரத்தால் உபசரிக்க முடிந்தது. சோமசுந்தரம் வாசலில் நின்ற காரை நோக்கி நடந்தார். உள்ளே திருமாறனின் தந்தை பள்ளிகொண்டிருந்தார். சரி, இப்போது உறக்கத்தின் தலையில் கை வைக்கக் கூடாதென்று திரும்பிவிட்டார். சில நாட்களுக்கு முன்ன தாக மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்க்க வந்தபோது ஏற்பட்ட அலுவல்கள் அவருக்கு நினைவில் எழுந்தன். 'இன்னும் நாலு நாள்தானே இருக்கு மேகலை கல்யாணத் துக்கு : என்று எண்ணமிட்டார்; பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டன. - நாழிகை வட்டம் அப்பொழுது தெரிவித்த நேரத்: மணி ஒன்பது. நிமிஷம் நாற்பத்தி மூன்று.