பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எல்லையற்ற பேரழகே......! எங்கும் நிறை பொற்சுடரே !’ சிலம்புச் செல்வரின் அழகுத் தமிழ்ப் பேச்சு அணி வகுத்து, அணி சேர்த்து முழங்கியது. விண் அதிர, மண் அதிர ஒலி பரப்பிய சொற் பொழிவில் மக்கள் மயங்கினர், மண் மினம் சொக்கியது ; கத்தும் கடல் பணி மறந்தது. சிலம்பு பண் சேர்த்தது; பொது மக்கள் சிந்தை சேர்த்தனர். கல் தோன்றி மண் தோன்ருக் காலத்தே வெற்றி முரசு இயம்பிய வீரத் தமிழனின் ஒவியம் விளக்கம் கண்டது இருபதாம் நூற்ருண்டு உதட்டோ ரத்தில் விரல் இருத்தி மெய்ம் மறந்தது. உச்சிக் கிழான் ஓய்வு கொள்ளத் துடித்தான் ; மேற்குத் திசையை ந்ோக்கிஞன். பொன் வண்ணத் துகள் கடற்கரைக் கிழிஞ்சல்களோடு கொஞ்சி விளை யாடின. கிழிஞ்சல்களின் உடற்பரப்பில் கறுமை மெல்ல மெல்லப்படர ஆரம்பித்தது. திருநாள் முடிந்த கோயில் போன்று காணப்பட்டது "மெரிஞ கடற்கரை. . மாமல்லன் கண்களை 'உயர்த்தின்ை ; பார்வையில் கூர்மை அமைந்தது. உறவாடி விளையாடிய அலைகடலின் மேற்பரப்பிலே, அவன் கருத்துக்கு இனித்த கல்யாணக் காட்சி யொன்றைக் கண்டான். 'வா, ஓடோடி வா !”