பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பேருங்க ஜாதகத்தையும் பார்த்துச் சொன்ன ஜோஸ்யர் பிரபலமானவர். அவர் பேச்சை நம்பாமல் வேறே என் ஞலே என்ன செய்ய முடியும் அவங்க அவங்க தலை யெழுத்துப்படிதானே லோகத்திலே எதுவும் நடக்கும்?... நாம் என்ன செய்யமுடியும்? எல்லாம் தெய்வசித்தம் : கொள்வினை கொடுப்பினை இல்லேன்ன, அதுக்காக நம்ப ரத்தபாசம் கூடவா அத்துப்போகும்? உன் வீட்டுக்கார ருக்கு - என்மச்சினருக்கு நான் கையடிச்சுக்கொடுத்ததை என் ஆவி தீருற மட்டும் மறக்கமாட்டேன். என்னையே எதிர்க் கேள்வி கேட்டுப்பிடாதே. வச்ச முகூர்த்தத்தை நிறுத்தப்படாது. மாமல்லனுக்கு நானே இருந்து இந்த மாசத்துக்குள்ளேயே கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். நீ கவலைப்படாதே, தங்கச்சி. என் பொண்ணு ஜாதகமும் உன் மகன் ஜாதகமும் கனகச்சிதமாப் பொருந்தி யிருக் கிறதாய்ப் பொய் பேசுவாங்க. அதையெல்லாம் காதிலே வாங்கிக்கிடாதே, கோசலை. நான் உன் அண்ணன் இல்லியா ? உன் கஷ்ட நஷ்டம் உன்ளுேடு கூடப்பிறந்த எனக்கும் இருக்காதா?...என்னை நம்பு, தங்கச்சி !” என்று திருவாய் மலர்ந்தார். தேன் சொட்ட உரைத்த தன் சகோதரரின் வாய், வார்த்தைகள் அவரது இதயத்திற்கு உரைகல்லாக அமைந்துவிட்டதாக அவள் எண்ண மறுத்தாள். தேனடையில் வேப்பஞ்சாறு அப்பப் பட்டிருப்பதாகவே ஒர் உணர்ச்சி பரவியது; அந்தக் கசப்பு அடித்தொண்டை யிலிருந்து, இதயத்தின் அடிவரைக்கும் படர்ந்தது. வலுக்கட்டாயப்படுத்திச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டார். கோசலை அம்மாள் கடைசிவரை வைராக்கியமாகவே மறுத்துவிட்டாள். go நடந்த நிகழ்ச்சியின் நிழலில் ஒண்டியிருந்த மாமல்ல னுக்குத் தன்னறிவு ஏற்பட்டது. - - மூன்று நாட்கள் கழித்து நடக்கவிருக்கும் மேகலை யின் திருமண விழா மாமல்லனின் நெஞ்சில் நெருப்பை இட்டது. இதயம் எரிமலையானது. காலப்பாதையில் நடைபயின்ற சம்பவங்கள் நடந்து சென்ற வழியிலேயே மீளவும் அடி யெடுந்து வைக்கத் தொடங்கின. அற்புத