பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§6 இன்பம் நிறைந்த இத்தகைய சுற்றுணர்ச்சியின் மத்தியில், துன்பும் சேர்ந்த இதயங்கள் இரண்டு சேர்ந்து அமர்ந்திருந்தன. இதயங்களைச் சுமந்திருந்த வர்கள் மாமல்லன்.-மேகலை. நூலிழைகூட இடையீடு அமைக்கவில்லே அவர்கள். இருவ்ர் வதனங்களும் ஒன்றை யொன்று மாற்றி மாற் றிப் பார்த்தன, இனம் விளங்காத தாபமும், இனம் புரிந்த அச்சமும் மெளனத்தைத் துண்டாடத் துணிந்து &#೬-೬....#f, "நாளைக் கழித்து கல்யாணம். கடைசியில் உன் முடிவு என்ன, மேகலை?” என வினவிஞன் மாமல்லன். ‘அத்தான், என்னைக் கேள்வி கேட்காதீங்க. விடையை மட்டும் நீங்கள் சொல்லிப்பிடுங்க. அதன்படி நடக்கிறேன். உங்க முடிவு எப்படியானுலும் சரி, அதை உடனே நிறைவேத்துகிறேன். இது சத்தியம்! " உறுதி சொன்னது போதாதென்று, அத்தானின் கைகளைப் பிடித்துக் கையடித்தும் கொடுத்தாள் அன்புச் செல்வி மேகலை. - உடல் ரத்தம் முழுதும் உச்சியில் அணை கட்டப் பட்டு விட்டாற்போலிருந்தது ; இது மாமல்லன் நிலை , நினைவு ; நடப்பு. அன்றைக்கேர் அவளைக் கண்டதும் அவன் விம்மினுன் , அவள் அவனுடைய கண்களைத் துடைத்துவிட்டாள். இன்றைக்கோ, தெய்வ வாக்காக வாய் மொழியை உதிர்த்து அவனது பெரு மூச்சைப் பெருஞ் சிரிப்பாக மாற்ற உத்தாரம் சொல்லியிருக்கிருள். நாணத்தின் துணை கொண்டு மட்டும் பெண் பெரும்ை அடைந்துவிடமாட்டாள் , துணிச்சலும் உறுதியும் பெண் மைக்கு அணிகலன்களாக அமைய வேண்டும்! யாராவது வேற்று மனிதர்கள் வருகிருர்களா வென்று அடிக்கொருமுறை மாமல்லன் நாற்புறமும் பார்த்துக் கொண்டிருந்தான்; பூந்தோட்டந்தில் பிறந்த மெல்லிய காற்று இதமாக வெண்சாமரம் வீசியது. கிழக்கு மூலையில் வந்தமர்ந்த இளம் ஜோடி ஒன்று அடுத்த ஐந்தாவது வினுடியில் புற்ப்பட்டது.