பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 திட்டத்தையும் ஏதோ ஒர் உணர்வு அப்புறப்படுத்த முற்படுவது போன்றதொரு நினைவு எழத் தொடங்கி விட்டது. அவனையும் அறியாமல் தாழ்வு மனப்பான்மை பின் சாயல் படர்ந்து பரவியது. - மேகலை எங்கே ? நான் எங்கே 3 மாமாவின் பணம் எங்கே? நான் எங்கே?--சைகோனில் விளைந்து வந்து கொண்டிருக்கின்ற வெள்ளைப் பணம் அவரது வெள்ளை மனசையே கறுப்பாக்கிவிட்டதே அவருடைய சொத் தைப் பற்றி அறிந்துதானே படக்கம்பெனி முதலாளி அவருட்ன் சம்பந்த்ம் வைத்துக்கொள்ள முன்ந்திருக் கிருர்?...ஆளுல் என்னுடைய இந்தப் புதியவழி... அது நல்லதா, கெட்டதா ? என் சுயநலம் எனக்குச் சொல்லிக் கொடுக்கும் பதில் நல்லது என்பதுதான். மேகலைக் கும் என் செயல் சரி என்றுதான் பட்டிருக்கிறது. என் எண்ணப்படியே அவளும்தான் சிந்தித்திருக்கிருளே ... மனிதர்களின் வாழ்க்கைத் தடாகத்திலே அமைந்திருக் கும் நீராழி அல்லவா ? இந்த முதற் காதல் ... எங்க ளுடைய முதற் காதல், எங்கள் வாழ்வுக்கு வசந்த மண்ட பம் அமைக்குமா 8. ஆம் ; கட்டாயம் என் கனவு நிறை வேறிவிடும். பின்னர், ஏதோ ஒரு நிறைவின்மை நெஞ் சகத்தை ஏன் முற்று கையிட்டிருக்கிறது ?... 'அம்மாவின் ஆசி பெற்று எனக்குரிய இல்லத் தரசியை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டிய நான், பெற்ற தாயிடம் கூடச் செய்தியைத் தெரிவிக்காமல், மேகலையுடன் பட்டணத்துக்கு இன்றிரவு ரயிலேறிப் போகிறேன் !... ம் ...வரும் விதி இராத்தங்காது என் பார்களே அம்மா!...என்னை, எங்களைத் தொடர யிருக்கும் விதி ஒரு வேளை எங்களுடனேயே பயனப்பட்டுவிடுமோ? மேகலையைக் காணுத விவரம் கேட்டு பெரிய பட்டாளமே படையெடுத்து வந்துவிட்டால் என்ன செய்வது ?... இந்தத் தமிழ்ச் சமுதாயம் ஆண் இனத்துக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் சட்ட திட்ட்ங்களைத் தளர்த்திக்கொள்ள ஏது உண்டு. ஆனல் பெண் இனம் அப்படி யல்லவே?.. பெண்களுக்கென்று எழுதப்பட்ட கட்டுப்பாடுகள் அவர் களது வாழ்க்கையாகவே அமைந்து விடுகின்றனவே?... மேகலை என்னுடன் புறப்பட்டுச் சென்றதைக் கேள்விப் பட்டதும் ஊரார்.அவளே நிந்திக்கமாட்டார்களா? தமிழ்ப் 5