பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உண்மை இன்றிட வேண்டும் ! ஒம்...ஓம்...இம்...ஓம் : 必 * - - - கெட்டி மேளம் கெட்டி மேளம்...!" நாகசுரம் மணமக்களுக்கு வாழ்த்துப் பாடியது; கொட்டுமேளம் ஆரத்தி எடுத்தது; திருமண கீதம் பாடிய இசைத் தட்டுகள் திருஷ்டி கழித்தன. மஞ்சளில் பிசைந்தெடுக்கப்பட்ட அட்சதைகள் “வாழ்க ! வாழ்க!” என்று நல்லாசி கூறின. உண்மைத் தமிழனும், அவனுடைய ரத்தத்தோடு ரத்தமாக ஐக்கியப்பட்டிருக் கும் தமிழ்ப் பற்றும்போல மாமல்லனும் மேகலையும், வாழ் வீர்களாக ' என்று நண்பர்கள் சிலர் அச்சடித்த பத்திரங் களின் வழியாக தங்களின் நல்லெண்ணங்களைத் தெரி வித்துக் கொண்டார்கள் : பரிசுகள் கொடுத்தார்கள் சிலர் ; பாராட்டுரைகள் வழங்கினர்கள் பலர். கண்முன் கண்டு கொண்டிருந்த காட்சிகள் ஒவ் வொன்றுமே மாமல்லனுக்குக் கனவு மாதிரியேதர்ன் தோன்றியது ; மேகலையின் கழுத்தைத் தொட்டு, எண்ணி மூன்று முடிச்சுகள் இடவேண்டுமென்று அன்று மனக்கோட்டை கட்டினுன் எழுப்பிய தளத் தைப் பலப்படுத்த, எண்ணங்கள் தளம் அமைத்தன ; கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத் தின் எழில் ராணியாக ஏற்றம் தந்தாள் மேகலை. அவள் அவனுடைய கனவுப் பதுமை : அவன் ஒருவனுக்கே 'முன்ருனே போட பாத்தியதை பூண்ட தங்க நிலா அவள், அவ்வாறுதான் அவன் அன்றைக்குக் கனவு கண்டான்-மமதையோடு, மனப் பூரிப்போடு. கண்ட கனவு தேய்ந்து மறைந்து விடுமோ என்று எண்ணும். அளவுக்குச் சந்தர்ப்பங்கள் சூழ்நிலையை உருவாக்கிய தருணத்திலே, அவனிடமிருந்து மேகலை எட்டாத தொலைவுக்கு எட்டி எட்டி விலகிக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை எழத் தொடங்கியது. * . .